''பிரிகேடியர் மீதான விசாரணையின் பின் நடவடிக்கை எடுக்கப்படும்''
லண்டனில் ஈழத்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது அவர்களை அச்சுறுத்தும் வகையில் சைகை காண்பித்த பிரிகேடியர் பிரியங்க பெர்னா ண்டோ மீது வெளி விவகார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை நட த்தி வருகின்றன. விசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என கேள்வியெ ழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதில ளித்தார்.
கடந்த நான்காம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரக த்திற்கு முன்னாள் புலம்பெயர்ந்த ஈழ த்தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர். இவ் ஆர்ப்பாட்டத்தின்போது தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகரான பிரிகேடியர் பிரியங்கபெர்னாண்டோ கழுத்தை அறுப்பேன் என்று சைகை மூலம் எச்சரிக்கை காண்பிக்கும் ஒளிப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து இவரை பதவியிலிருந்து நீக்குமாறு வெளிவிவகார அமைச்சு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இவ் உத்தரவை ஜனாதிபதி தடுத்து நிறுத்தியதுடன் பிரிகேடியரை தொடர்ந்தும் பதவியில் அமர்த்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த நிலையில்தான் வெளிவிவகார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை தொடர்வதாகவும் விசாரணையின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.