Breaking News

தமிழ் ஊடகங்கள் இரண்டை மஹிந்த வாங்கி விட்டார் - சுமந்திரன்!

இரண்டு தமிழ் ஊட­கங்­களை மகிந்த ராஜ­பக்ச வாங்கி விட்­டார். இன்­று ­தான் எனக்கு இந்­தத் தக­வல் கிடைத்து என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஊட­கப் பேச்­சா­ள­ரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரிவித்து ள்ளார். 

கர­வெட்­டி­யில் வேட்­பா­ளர் ஒரு­வ­ரின் வீட்­டில் நடைபெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: முக்­கி­ய­மான இரண்டு தமிழ் ஊட­கங்­களை மகிந்த ராஜ­பக்ச வாங்கியுள்ளதாக இன்று காலை தான் இத் தக­வல் எனக்குக் கிடைத்­தது. அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன யாழ்ப்­பா­ணம் வந்தபோது கறுப்­புக் கொடி காட்­டியவர்­கள், கறுப்­புப்பட்டி அணிந்து போராட்­டம் நடத்­தியவர்­கள், முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்ச யாழ்ப்­பா­ணம் வந்­த­போது எந்த எதி ர்ப்­பும் தெரி­விக்­க­வில்லை. மகிந்­த­வுக்கு சிறப்­பான வர­வேற்­பைக் கொடுத்­துள்­ளார்­கள் –- எனத் தெரிவித்துள்ளார்.