மக்களுக்கு நன்றி ! 65- 70 வீத வாக்குப்பதிவு - மஹிந்த தேசப்பிரிய.!
நடந்தேறி முடிந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் பாரதூரமான குற்றச்சாட்டு க்கள் பதிவாக்கப்படாமை ஆரோக்கியமான நகர்வு எனவும் அமைதியான முறையில் தேர்தலை நடத்தியமைக்கு மக்களுக்கு நன்றியினை தெரிவிப்ப தாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவி த்துள்ளார்.
மோசமான குற்றச்செயல்கள் எவை யும் இடம்பெறாத வகையில் பாது காப்பு தரப்பினர் சேவையில் ஈடு பட்டமை குறித்து அவர்களுக்கு நன்றி யினை தெரிவிப்பதாகவும் மக்கள் விரும்பும் வகையில் ஒரு தேர்தல் நடந்தேறியதாக தெரிவித்ததுடன், மேலும் இம்முறை தேர்தலில் 65 - 70 வீத வாக்குப்பதிவுகளை நாடளாவிய ரீதியில் மக்கள் செய்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.