ஜனாதிபதியின் சூளுரைப்பு !
ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுகொடுத்த பின்னரே நான் ஜனாதிபதி பத வியிலிருந்து இருந்து விலகுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஊழல், குற்றங்கள் இல்லாத ஜனநாயக ரீதி யிலான பயணம் ஒன்றை முன்னெடுக்க மக்களுடன் வீதியில் இறங்கி போரா ட்டம் நடத்தவும் தயாராக உள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கூறுகையில்,
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஒன்றுக்கு நாம் முகங்கொடுக்க வேண்டியுள்ள போதிலும் இந்த நாட்டினை தூய்மையான நாடாக மாற்றியமைக்க அரசியல் கட்சி பாகுபாடு இன்றி செயற்பட வேண்டும். நாட்டினை நேசிக்கும் சகல அர சியல் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து ஊழல், மோசடிகள் இல்லாத ஒரு ஒரு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நான் தயாராக உள்ளேன்.
இதில் சகல மதத் தலைவர்களும், கல்விமான்கள் மற்றும் நாட்டினை நேசி க்கும் சகல மக்களும் ஒன்றிணைய வேண்டும். நாட்டினை மீண்டும் பின்னோ க்கி கொண்டு செல்லாது சரியான திசையில் கொண்டு செல்ல நாம் முயற்சி களை முன்னெடுத்து வருகின்ற போதிலும் ஒரு சிலர் இந்த நாட்டில் குழப்ப ங்களை ஏற்படுத்தி அதன் மூலமாக நாட்டினை சீரழிக்க முயற்சிக்கின்றனர்.
மீண்டும் நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சியினை உருவாக்கி மக்களை அடிமை ப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுக்க இவர்கள் மீண்டும் ஆட்சியினை கோரி நிற்கின்றனர். ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட, மக்கள் தண்டிக்கப்ப ட்ட, மனித உரிமைகள் மீறப்பட்ட ஆட்சியினையே இவர்கள் மீண்டும் உரு வாக்க முயற்சித்து வருகின்றனர்.
முன்னைய ஆட்சியின் போது இந்த நாட்டில் இடம்பெற்ற அடக்குமுறைகள் காரணமாகவே சர்வதேச அழுத்தம் ஒன்று உருவாகி எம்மை நசுக்கும் சக்திகள் பலமடைந்தன. எனினும் இன்று நாம் அவற்றில் இருந்து நாட்டினை மீட்டெ டுத்து ஜனநாயகத்தை பலப்படுத்தியுள்ளோம்.
எவ்வாறான நிலையில் மீண்டும் நாட்டினை பின்னோக்கி கொண்டுசென்று சர்வதேச அழுத்தங்களுக்குள் நாட்டினை தள்ள நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன்.
அதேபோன்று ஊழல் மோசடிகளை செய்த நபர்களை தண்டித்தே தீர்வேன்.
கடந்தகால ஊழல்வாதிகள் மற்றும் மக்களின் சொத்துக்களை கொள்ளைய டித்த சகல தரப்பினருக்கும் ஊழல் வாதிகளுக்கும் தண்டனையினை பெற்று க்கொடுத்த பின்னரே நான் எனது பதவியை துறப்பேன். அத்துடன் ஊழல் இல்லாத நாட்டினை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து போராட கை கோர்க்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.