முச்சக்கர வண்டி விபத்தில் ஒருவர் பலி ; ஒருவர் படுகாயம் !
மட்டக்களப்பு பாசிக்குடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒரு வர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் மட்டக்களப்பு பாசிக்குடா பிரதான வீதிச் சந்தியில் நேற்று வியா ழக்கிழமை மாலை இடம்பெற்று ள்ளது.
விபத்தில் கல்குடாவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தை யான மு.சூரியகுமார் வயது (37)என்ப வரே சம்பவ இடத்தில் உயிரிழந்து ள்ளதாகவும் அதே இடத்தைச் சேர்ந்த ஜே.ஜெயதீபன் வயது (40) என்பவர் படுகயமடைந்து வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். பாசிக்குடா கடற்கரையில் இருந்து முச்சக்கரவண்டியில் நண்பருடன் தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் முச்சக்கர வண்டியானது வேகக்கட்டுப்பாட்டினை இழந்து வீதியைவிட்டு விலகி அருகில் இருந்த மின்கம்பத்துடன் மோதியே இவ்விபத்து நடைபெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவ தாக கல்குடா பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜ.பி.ஹேரத் தெரிவி த்துள்ளார்.