Breaking News

மஹிந்த ஆட்­சியை பிரண்டவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­யாம் - திஸ்ஸ

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்­த­மை­யா­னது நாட்டை கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு அல்ல. மாறாக மஹிந்த ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­காக மாத்­தி­ரமேயாகும். 

இவ்­விரு கட்­சி­க­ளும் அமைச்­சு க்களை பகிர்ந்து கொண்டாலும் இரு வேறு கொள்­கைகளை கொண்டே அர­சி­யலை நடத்தி வரு­கின்­றன என முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்­தார். 

மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய மஹா­சங்­கத்­தி­னரை நேற்று சந்­தித்த பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். மேலும் கருத்து தெரி­விக்­கையில், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த ­ரா­ஜ­ப­க்ஷ­வி­ன் ஆட்­சியை கவிழ்ப்­ப­தற்­கா­கவேயன்றி வேறு எந்த கார­ணத்­திற்­கா­கவும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஒன்­றி­ணையவில்லை. 

முன்னைய ஆட்சியைக் கவிழ்ப்­ப­தற்­கா­கவே ஒன்­றி­ணைந்­த­னர். நாட்டை முன்­னேற்­றப்­பா­தையில் இட்­டுச்­செல்­வ­தற்­காக அல்ல. ஆனால் இவ்­விரு கட்­சி­களும் ஒரு நோக்­கத்தின் கீழ் செயற்­ப­ட­வில்லை. அதனால் தற்­போது ஆட்­சியில் விரிசல் ஏற்­பட்­டுள்­ளது. 

மேலும் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்­சியும் மேல் மட்­டத்தில் ஒன்­றி­ணைந்து காணப்­பட்­டாலும் கீழ் மட்­டத்தில் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வில்லை என்­பது தெளிவா­கி­றது. காரணம் ஒரே நோக்­கத்தை அடிப்ப டையாக வைத்துச் செயற்படவில்லை. 

ஏதோ ஒரு காரணத்திற்காக ஒன்றிணைந்துள்ளோமென தெரிவித்தாலும் அவ ர்களின் செயற்பாடு வேறொன்றாகவே தென்படுவதாக தெரிவித்துள்ளார்.