Breaking News

இலங்கை - இந்தியா அணிகளுக்கு டெல்லியில் ஏற்படும் தடைகள் என்ன ?

காற்று மாசு கார­ண­மாக டெல்­லியில் நடை­பெற்­று­வரும் இலங்கை – இந்­திய அணி­க­ளுக்­கி­டை­யி­லான போட்டிக்கு அடிக்­கடி தடையேற்பட்டுள்ளது. 

இதுபோன்று கிரிக்கெட் வர­லாற்றில் பல விநோத கார­ணங்­க­ளுக்­காக ஆட்டம் தடைப்­பட்­டி­ருக்­கி­றது. 1951 ஆண்டு சென்னை சேப்­பாக்­கத்தில் இந்­தி­யா­வுக்கு எதி­ரான டெஸ்ட் போட்­டியில் இங்­கி­லாந்து முதல்­நாளில் துடுப்­பெ­டுத்­தா­டி­யி­ருந்த போது, இங்­கி­லாந்து நாட்டின் மன்னர் மர­ண­ம­டைந்­ததால் வீரர்கள் இங்­கி­லாந்து திரும்­பினர். 

1980ஆ-ம் ஆண்டு மும்­பையில் இந்­தியா – - இங்­கி­லாந்து இடை­யே­யான ஆட்டம் நடை­பெற்­றது. அப்­போது சூரிய கிர­கணம் என்­பதால் இரண்டாம் நாள் ஆட்டம் கைவி­டப்­பட்­டது. 

1984 ஆண்டு பாகிஸ்­தானில் இந்­திய அணி 40 ஓவர்கள் ஆடி­யி­ருந்த நிலை யில் இந்­திரா காந்தி படு­கொலை செய்­யப்­பட்ட செய்தி எட்­டி­யதும் ஆட்டம் கைவி­டப்­பட்­டது. 

1944ஆம் ஆண்டு இரண்டாம் உல­கப்போர் நடந்­து­கொண்­டி­ருந்த சமயம், இங்­கி­லாந்து லோர்ட்ஸ் மைதா­னத்தில் `தி ஆர்மி' அணிக்கும் `தி ரோயல் ஏர்ஃ போர்ஸ்' அணிக்கும் இடை­யே­யான போட்­டி­யின்­போது ஜேர்­மனி நாட்டின் `டூடுல் பக்' என அழைக்­கப்­படும் `குண்டு வீசும்' விமானம் ஒன்று லோர்ட்ஸ் மைதா­னத்தின் மேல் பறந்­தது.

இதை­ய­டுத்து, வீரர்கள் அனை­வரும் அச்­சத்தில் தரையில் கவிழ்ந்து படுத்­தனர். ஆனால், குண்டு அருகில் உள்ள `ரீஜென்ட் பார்க்கில்' விழுந்தது.