தாவரவியல் பூங்காவாக மாற்றமா? கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் கல்லறைகள் !
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் தாவரவியல் பூங்கா எனும் பெயர் பலகை ஒன்று நிலை நாட்டப்பட்டுள்ளது.
குறித்த பெயர் பலகையை கிளி நொச்சி கரைச்சி பிரதேச சபையே நாட்டியுள்ளதாக தெரியவரும் நிலை யில் இதனால் பல சர்ச்சைகள் எழு ந்துள்ளன.
இது குறித்து கரைச்சி பிர தேச சபை செயலாளர் கம்சநாதனை தொடர்பு கொண்டபோது,
இந்த பெயர் பலகை கரைச்சி பிரதேச சபையினால் தான் நாட்டப்பட்டதாகவும் கரைச்சி பிரதேச சபையின் கீழ் அது தாவரவியல் பூங்கா என வருகின்றதாகவும் சூளுரைத்துள்ளார். அத்துடன் அண்மையில் இடம்பெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்ட த்தில் இது தாவரவியல் பூங்கா என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தாவரவியல் பூங்கா என்ற பெயரிலேயே இங்கு தற்போது அபிவிருத்தி பணி கள் நடைபெற்று வருகின்றமையால் அதனை தெளிவூட்டும் வகையில் கரை ச்சி பிரதேச சபையினால் தான் இந்த பெயர் பலகை நாட்டப்பட்டதாகவும் தெரி வித்துள்ளார்.