Breaking News

"விஸ்­வ­ரூபம் எடுத்து நின்­றதை விழிகள் விரிய வியந்­தவன் நான்"

மண்ணால் மனி­தர்­களும் மனி­தர்­களால் மண்ணும் பரஸ்­பரம் மேன்­மை­யு­று­தலும், அதனைக் காலம் தன் குறிப்­பேட்டில் பதிவு செய்­தலும் மர­பா­கவே இருந்து வரு­கி­றது. 

இந்த மர­பை­யொட்டி, காய்தல் உவத்­த­லின்றி ஒரு கணக்குப் போட்­டுப்­பார்க்­கையில் ஸ்ரீரங்­கத்து மண்ணில் வேர்­கொண்டு, தொல்­லு­லகின் பல்­வேறு கங்­கு­களில் கிளை பரப்­பிய கீர்த்­தி­மிகு விருட்­சங்­களை என் புத்­திக்கு எட்­டிய வரையில் படம்­பி­டித்து ஒரு புகைப்­பட அல்­ப­மா­கவே நினைவு அலு­மா­ரியில் அடுக்கி வைத்­தி­ருக்­கிறேன். 

இந்த அல்­பத்தில் அன்­றைய மனி­தர்­களும் அகப்­ப­டு­கி­றார்கள். இன்­றைய மனி­தர்­களும் அகப்­ப­டு­கி­றார்கள். ஆகவே என்­னு­டைய ஊருக்குப் பெருமை சேர்த்­த­வர்­களை நான் எண்­ணிப்­பார்க்­கை யில், திரு­வ­ரங்­கத்து மண்ணின் மேன்மை எனக்குத் தெள்­ளத்­தெ­ளியப் புல­னா­கி­றது. 

இத்­தகு மண்ணின் பெரு­மையைப் பேச வரும்­போது, இந்த மண்ணின் மண­முள்ள ஒரு பெண்ணின் பெரு­மை­யையும் பேச வேண்டும் என்று நான் பெரி தும் விரும்­பு­கிறேன். ஏறத்­தாழ முப்­ப­தாண்­டு­க­ளுக்கு முன்­ன­தாக எனது நண்பர் வி.கோபா­ல­கி­ருஷ்­ண­னோடு தியா­க­ரா­ய­நகர், சிவ­ஞானம் தெருவில் ஒரு வீட்­டுக்கு நான் செல்ல நேர்ந்­தது. 

அந்த வீட்டின் குடும்ப நண்பர் கோபி, அந்த குடும்­பத்தின் தலை­வி­யிடம், இவர் பேரு வாலி. சினி­மாவில் பாட்­டுகள் எழு­தி­யி­ருக்­காரு. சொந்த ஊர் ஸ்ரீரங்கம் என்று கோபி சொன்­னதும், எங்க பூர்­வீகமும் ஸ்ரீரங்­கம்தான் என்று அந்த அம்­மையார் முக­மெல்லாம் மகிழ்ச்சி பொங்க எனக்கு முகமன் கூறி­னார். 

அன்று நெடு­நேரம் நானும் கோபியும் அந்த அம்­மை­யா­ரோடு பேசிக்­கொண்­டி­ருந்தோம். அப்­போது சகோ­தரி திரு­மதி.அம்­பு­ஜமும் அவ­ரது கணவர் வெங்­கட்­ரா­மனும் உட­னி­ருந்­த­தாக ஒரு நினைவு. 

திரு­மதி அம்­புஜம் தான் வித்­தி­யா­வதி என்னும் பெயரில் திரைப்­ப­டங்­களில் பங்­கு­பற்­றி­யவர். கோபி­யுடன் சென்று நான் சந்­தித்த அம்­மையார் தான் திரு­மதி சந்­தியா. அவ­ரது மகள்தான் ஜெய­ல­லிதா. 

ஆயிரம் விழு­துகள் பரப்பும், ஆல­ம­ரத்தைச் சின்­னஞ்­சிறு விதைக்குள் சிறை வைப்­பது போல், அளப்­ப­ரிய கீர்த்­தி­யையும், நேர்த்­தி­யையும் இந்தப் பெண்ணுள் இறைவன் பொதிந்து வைத்­தி­ருக்­கிறான். 

செல்வி.ஜெய­ல­லிதாவின் அறி­வையும் ஆற்­ற­லையும் ஆரம்ப நாட்­க­ளி­லி­ருந்தே துலாக்கோல் போல் துல்­லி­ய­மாக எடை போட்­டவன் நான். இரு­வரும் ஒரே துறையில் தொழில் புரிந்ததால் அவரை ஓர­ளவு அறிதல் எனக்குச் சாத்­தி­ய­மா­யிற்று. 

பட­வு­ல­கத்தின் புகழ் கிரீ­டத்தை அவர் சுமந்­தி­ருந்த போது பாட்டும், பர­தமும் பள்­ளித்­தோ­ழிகள் போல் அவர் பக்­கத்தில் இருந்­தன. எதிலும் தன்னை முழு­மை­யாக ஈடு­ப­டுத்­திக்­கொள்ளும் பற்றும், பற்­றி­யதை விடாமல் சாதித்­துக்­காட்டும் சாது­ரி­யமும், கனல் வளை­யத்­திற்­கி­டையே கற்­பூ­ர­மாகச் சிக்­கிக்­கொண்­டாலும் மேனி காயம்­ப­டாது மீண்­டு­வரும் வித்­தையும் அவ­ருக்கு இறை வன் அரு­ளிய கொடை­யாக இருந்­ததால்தான் கோடம்­பாக்­கத்­தி­லி­ருந்து கோட்­டைக்கு வந்து கொலு­வி­ருத்­தலும் கோலோச்­சு­தலும் அவ­ருக்குக் கைவந்த கலை­யா­யிற்று. 

இளம் வயதில் தாயை இழந்த ஒரு பெண்­மணி தனித்து நின்று அர­சி­யலில் இறங்கி, ஏச்­சுக்கும் பேச்­சுக்கும் இடர்­ப­டாது தமிழ் கூறும் நல்­லு­லகின் தலை­வி­தியை நிர்­ண­யிக்கும் தலை­வி­யாகக் கிளர்ந்து, தகத்­த­கா­ய­மாக விளங்­கி­யதை எண்­ணுங்கால், அப்­போதே சொன்­னானே பாரதி என்று அவ­னது புது­மைப்­பெண்ணைப் பற்­றிய தீர்க்­க­ த­ரி­சனம் நம்­கண்­க­ளுக்குப் புல­னா­கின்­றது.

ஸ்ரீரங்­கத்தைப் பூர்­வீக­மாகக் கொண்ட ஒரு குடும்­பத்தின் வழித்­தோன்றல், அதுவும் ஒரு பெண் இப்­படி ஒரு விஸ்­வ­ரூபம் எடுத்து நின்­றதை விழிகள் விரிய வியப்­போடு அப்­போதே பார்த்­தவன் நான். 1984 இல் பெரிய புள்­ளிகள் என்னும் என் கவிதை நூல் பிரசுரமாகியுள்ளது.