Breaking News

2020 இல் கோத்தா நாட்டின் தலை­மை ஆவாரா ?

2020 ஆம் ஆண்டு யார் இலங்­கையின் தலை­வ­ராக வருவார் என்ற வகையில் எவ்­வி­த­மான ஆய்­வையும் கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு மேற்­கொள்­ள­வில்லை.

மேலும் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­ப­ட­வில்­லை­யென்றும் தாம் எந்தப் பொறு ப்­பையும் ஏற்க மாட்டோம் என்றும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலைப்­பீட ஊட­கத்­து­றைப் ­பி­ரிவு தெரி­வித்­தி­ருக்­கின்­றது. 

கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு நடத்­திய கருத்­துக்­க­ணிப்­பொ ன்றில் 2020 ஆம் ஆண்டில் இந் நாட்டின் தலை­வ­ராக முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ தெரி­வு­ செய்­யப்­ப­டுவார் என நேற்று வெளியான வார இறுதி சிங்­களப் பத்­தி­ரி­கை­யொ ன்றில் எழுதப்பெற்றுள்ளது.

அது தொடர்பில் கொழு ம்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு விடுத்­ துள்ள அறிக்­கை­யி­லேயே இந்த விட­யங்கள் குறிப்பி­டப்­பட்­டுள்­ளன. இது தொடர்பில் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கலைப்­பீ­டத்தின் ஊட­கப்­பி­ரிவின் இணைப்­பாளர் பேரா­சி­ரியர் சமந்த ஹேரத் கையொப்­ப­மிட்டு விடுத்­துள்ள அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,- 

குறித்த அறிக்­கையில் வெளி­யி­டப்­பட்­டுள்­ள­வாறு எவ்­வி­த­மான கருத்­துக்­க­ணிப்­பையும் கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு செய்­ய­வில்லை. இவ்­வாறு கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் கருத்­துக்­க­ணிப்பை நடத்­தி­ய­தா­க, செய்­தியை வெளி­யி­டு­வதன் மூலம் வாச­கர்கள் தவ­றாக வழி­ந­டத்­தப்­ப­டு­கின்­றனர்.

எந்­த­வொரு நபரும் ஆய்­வொன்றை நடத்­து­வதும் அதனை பிர­சு­ரிப்­ப­தற்கும் உரி­மையைக் கொண்­டி­ருக்­கிறார். ஆனால் அவ்­வா­றா­ன­தொரு கருத்­துக்­க­ணிப்பை கொழும்புப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊட­கப்­பி­ரிவு செய்­தி­ருந்தால் அதனை கொழும்பு பல்­க­லைக்­க­ழகம் செய்­த­தாக கூறு­வது வேறு­பட்ட அர்த்­தத்தைக் காட்டும். 

இச்செய்தி வெளி­யா­னதன் பின்னர் இவ்­வா­றா­ன­தொரு கருத்­துக்­க­ணிப்பை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஊடகப் பிரிவு முன்­னெ­டுத்­ததா என்று பலர் என்­னிடம் கேட்­கின்­றனர். ஆனால் அது தொடர்பில் எம்­மை ­யாரும் தெளி­வு­ப­டுத்­த­வில்லை. 

அத­னால்தான் இது­தொ­டர்பில் தெளி­வு­ப­டுத்தும் நோக்கில் இவ்வறிக்­கையை நான் வெளி­யி­டு­கின்றேன். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு தலைவர் யார் என்ற வகையில் கொழும்பு பல்கலைக்கழகம் கருத்துக்கணிப்பை நடத்தி யுள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பொய்யானது என்பதை புலப்படுத்தி யுள்ளது.

இவ் விடயத்துடன் கொழும்பு பல்கலைக்கழகமோ அல்லது ஊடகப்பிரிவோ எந்த வகையிலும் தொடர்படவில்லை.