Breaking News

உல­கக்­குழு தலை­வரின் மகனை வேட்­பாளர் பட்­டி­யலில் இருந்து விலக்கினார் - பிர­தமர்

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் கொழும்பு மாந­கர சபைக்­கான வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க தயா­ராக இருந்த ஒரு­வரின் பெயரை பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க தலை­யிட்டு நீக்­கி­யுள்ளார். 


பிர­பல பாதாள உல­கக்­கு­ழுவின் தலை­வரின் மகனின் பெயரே இவ்­வாறு நீக்­கப்­பட்­டுள்­ளது. சம்­பந்­தப்­பட்ட பாதாள உல­கக்­குழுத் தலைவர் வெளி­நாட்டில் தலை­ம­றை­வா­கி­யுள்­ள­துடன், அவ­ரது மகனை ஐக்­கிய தேசியக் கட்­சியின் வேட்­பாளர் பட்­டி­யலில் இணைக்க அக் கட்­சியின் கொழும்பு மாவட்ட தலை­வர்கள் கடும் முயற்­சி­களை முன்னெடுத்துள்ளனர்.  இதே­வேளை, இது குறித்து தகவல் அறிந்த பிர­தமர் நேற்று முன்­தினம் அதி­காலை 3 மணி­ய­ளவில் சம்­பந்­தப்­பட்ட நபரின் பெயரை வேட்பாளர் பட் டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.