Breaking News

சுகந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட சந்தர்ப்பமில்லையாம் – மஹிந்த

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யு­டன் கூட்டு எதி­ரணி இணைந்து போட்­டி­யி­டு­வ­தற்கு வாய்ப்பு இல்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவிப்பு. 

அமைச்­சர் லக்ஸ்­மன் யாப்பா அபே­வர்த்­த­ன­வின் மக­னின் திரு­மண நிக ழ்­வில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை சந்தித்தமை தொட ர்பில் கருத்து வழங்குகையில்  தெரி வித்துள்ளார்.  

மேலும் தெரிவிக்கையில், ‘நாங்­கள் அர­சி­யல் பேச­வில்லை. தாம் மற்­றொரு திரு­ம­ணத்­தில் பங்­கேற்க வேண்­டி­யி­ருப்­ப­தாக மைத்­தி­ரி­பால சிறி­சேன என்­னி­டம் தெரிவித்தார். நானும் கூட இன்­னொரு திரு­ம­ணத்தில் பங்­கேற்க வேண்­டி­யி­ருப்­ப­தாக தெரிவித்துள்ளார். 

அதே­வேளை, பொது­மக்­கள் முன்­ன­ணி­யின் தலை­வ­ரும், முன்­னாள் அமைச்­ச­ரு­மான பேரா­சி­ரி­யர் ஜி.எல்.பீரிஸ், கூட்டு எதி­ரணி தனித்­துப் போட்­டி­யி­டும் முடிவு இறு­தி­யா­னது என்­றும், வேட்­பு­ம­னுக்­களை இறுதி செய்­வ­தில் தாம் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்தார்.