Breaking News

பிரபாகரனிடம் மண்டியிடாத நாம் அரசியல் வாதிகளிடமா மண்டியிடப்போவது - மகிந்த!

பிர­பா­க­ர­னிடம் மண்­டி­யி­டாத நாம் இன்­றைய அர­சி­யல்­வா­தி­க­ளி­டமா மண்­டி­யி­டப்­போ­கின்றோம், எந்த சவா­லையும் வெற்­றி­கொள்வோம் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ விசனம். 

உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் நாங்­களே, சின்­னத்தை விட வும் கொள்கை ரீதியில் உள்ளோம் எனவும் மகிந்த ஆதங்கம்.  ஸ்ரீலங்கா பொது ­ஜன முன்­ன­ணியின் முத­லா­வது தேர்தல் கூட்டம் நேற்று பது­ளை யில் ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்­து கொண்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறு­கை யில். நல்­லாட்சி வந்தால் நாடு அபி­வி­ருத்தி அடையும் எனவும் மக்­க­ளிடம் பணம் இருக்கும் எனவும் கூறி ஆட்­சிக்கு வந்­த­வர்கள் இன்று நாட்டின் பொரு­ளா­த­ரத்தில் வீழ்ச்சி உள்­ள­தாக தெரிவித்துள்ளனர். 

இந்த நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை நாம் வீழ்த்­தி­ய­தா­கவும், இந்த நாட்­டினை கடனில் ஆழ்த்­தி­யது எமது அர­சாங்கம் எனவும் கூறு­கின்­றனர். நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் தான் வீழ்ச்­சிக்கு காரணம் எனக் கூறு­கின்­றனர்.

ஆனால் நாம் முன்­னெ­டுத்த வேலைத்­திட்­டங்கள் அனைத்­தையும் முன்­னெ­டுக்க சரி­யான வேலைத்­திட்­டங்­களை வகுத்­தி­ருந்தோம். மேலும் ஸ்ரீலங்கா சுத ந்­திர கட்­சியில் இருந்து எம்மை வெளி­யேற்­றவும் நாம் ஸ்ரீலங்கா காரர்கள் இல்லை எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். 

உண்­மை­யான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சிக்­கா­ரர்கள் நாங்கள் தான். ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி என்­பது சின்னம் அல்ல, கொள்­கையே ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாகும். அது எம்­மிடம் மட்­டுமே உள்­ளது. 

தேசிய அர­சாங்­கத்தில் சலு­கை­க­ளுக்­காக தஞ்சம் புகிந்­துள்ள ஒரு இலர் தம்மை ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் எனவும் எமது மக்­களை பாது­காக்­கவே தாம் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­பட்டு வரு­வ­தா­கவும் கூரு­கி­னர்னர். அவ்­வாறு என்றால் நாம் எதற்­காக உள்ளோம், எதற்­காக இந்த போரா ட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். 

இந்த நாட்டின் மீண்டும் சரி­யான தலை­மைத்­துவம் உரு­வாக்­கப்­பட வேண்டும். அதற்­கா­கவே மீண்டும் நாம் போராட ஆரம்­பித்­துள்ளோம். இந்த நாட்டின் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து இந்த நாட்­டினை பாது­காத்­துள்ளோம். 

பிர­பா­க­ரனின் அச்­சு­றுத்தல், அவர்­க­ளுக்கு இருந்த சர்­வ­தேச பலம் எதையும் கண்டு அஞ்­சாது, அவர்­க­ளிடம் மண்­டி­யி­டாத நாம் இன்றுள்ள அரசியல்வாதி களில் வெட்டி சவால்களுக்காக அடிபணியப்போகின்றோம். 

இந்த அரசாங்கம் எம்மீது சுமத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் எதையும் கண்டு நாம் அஞ்சப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.