Breaking News

நிதியமைச்சரின் வரவு செலவுத் திட்டத்திற்கு பாராட்டு - ஜனாதிபதி !

ஸ்ரீலங்காவின் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வழங்கிய வரவு செலவுத் திட்டத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராட்டி யுள்ளார்.

பாராளு மன்றத்தில் நடைபெறும், 2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் பத்தொன்பதாம் குழு நிலை விவாத உரையில் நேற்றைய தினம் இம்முறை வரவு செலவுத்தி ட்டம் நிலைபேறான அபிவிருத்தி யின் இலக்கை அடைவதற்கு உந்து சக்தியாக அமையுமென ஜனாதிபதி யின்  எதிர்பார்ப்பு அமைந்துள்ளது. தற்போதைய அரசாங்கம் பதவியேற்ற மூன்று ஆண்டுகளில் இலவச சுகாதார சேவையையும், இலவசக் கல்வி யையும் உறுதிப்படுத்த சிறப்பான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து ள்ளது. 

இந்த நாட்டின் இலவச சுதந்திர சேவையையும், இலவச கல்வியையும் உறுதி ப்படுத்த முடிந்துள்ளதுடன் வீடுகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கடந்த 3 ஆண்டுகளில் தற்போதைய அரசாங்கம் விசேட நடவடிக்கைகளை எடுத்துள்ள தாகவும் ஜனாதிபதி விவரித்துள்ளார். 

ஆயிரத்து 200 கோடி ரூபாய் செலவில் பொலநறுவையில் நிர்மாணிக்கப்பட்டு ள்ள சிறுநீரக நோயாளர்களுக்கான வைத்தியசாலை எதிர்வரும் வியாழக்கி ழமை திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். 

நாட்டில் சுகாதார சேவையை சர்வதேசம் பாராட்டியிருப்பதாகவும் ஜனாதிபதி நிரூபித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.