Breaking News

இறுதி முடிவிற்காக தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்று கூடுகின்றது - இன்று!

உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­காக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சந்திப்பு இன்று.

குறித்த கூட்­ட­மா­னது யாழ்ப்­பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­ய­க த்தில் பிற்­பகல் இரண்டு மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. 

 ஏற்­க­னவே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் அங்கம் வகிக்கும் இல ங்கை தமி­ழ­ர­சுக்­கட்சி, புளொட், ரெ லோ ஆகிய கட்­சிகள் நேற்று முன்­தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆச­னப்­பங்­கீடு தொடர்பில் விரி­வான கலந்­து­ரை­யா­டலில் செயற்பட்டுள்ளனர்.  குறித்த கலந்­து­ரை­யா­டலில் 80 சத­வீ­த­மான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்த்தேசியக் கூட்­ட­மைப்பின் வேட்­பாளர் பட்­டி­யலை பூர்த்தி செய்­வ­தற்­கான இறுதி தீர்­மானம் எடுப்­ப­தற்­கான சந்­திப்­பா­கவே இன்று நடை­பெறும் சந்­திப்பு அமை­யும்.  

இதே­வேளை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இடம்­பெ­ற­வுள்ள உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பும் முன்­வந்­தி­ருந்­தது. இதற்­கான பச்­சைக்­கொடி இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சி­யினால் காட்­டப்­பட்­டுள்­ளது. 

முன்­ன­தாக கடந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லின்­போது ஜன­நா­யக போரா­ளிகள் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணை­வ­தற்­கான முயற்­சி­களை மேற்­கொண்­டி­ருந்­த­போதும் வவு­னி­யாவில் இடம்­பெற்­றி­ருந்த சந்­திப்­பின்­போது ஜன­நா­யக போரா­ளிகள் கட்சி தொடபில் காணப்­பட்ட சந்­தே­கங்­களின் கார­ண­மாக கூட்­ட­மைப்பின் தலைமை உள்­ளிட்­ட­வர்கள் அத்­த­ரப்­பினை இணைத்­துக்­கொள்­வ­தற்கு விரும்­பி­யி­ருக்­க­வில்லை. 

இவ்­வா­றான நிலையில் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வந்த பேச்­சு­வார்த்­தை கள் மற்றும் கலந்­து­ரை­யா­டல்­களின் அடிப்­ப­டையில் அவ்­வ­மைப்பு தற்­போது கூட்­ட­மைப்­பினுள் உள்­வாங்­கு­வ­தற்­கான இணக்­கப்­பா­டுகள் எட்­டப்­பட்­டுள்­ள­தாக அறி­ய­மு­டி­கின்­றது. 

ஜன­நா­யகப் போரா­ளிகன் அமைப்­பா­னது தமது அமைப்பு சார்பில் உள்­ளு­ராட்சி மன்­றங்­களில் கள­மி­றங்­கு­வ­தற்கு எதிர்ப்­பார்த்­துள்ள வட்­டா­ரங்கள் தொடர்­பி­லான பட்­டி­ய­லொன்றை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­மை­யி­டத்தில் கைய­ளித்­தி­ருப்­ப­தா­கவும் அறிய முடி­கின்­றது. 

இதே­வேளை சுகு.ஸ்ரீதரன் தலை­மையில் செயற்­பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். பத்­ம­நாபா அணி என நன்­க­றி­யப்­பட்ட தமிழர் சமூக ஜன­நா­யக கட்­சியும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் இணைந்து கொள்­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை முன்னெடுத்துள்ளது. 

இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் ஏறக்­கு­றைய நிறை­வுக்கு வந்­துள்­ளன. எவ்­வா­றா­யினும் தமிழர் சமூக ஜன­நா­யக கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் வட­கி­ழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் நாடு திரு ம்பியுள்ள நிலையில் அக்கட்சி தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இறுதி முடிவுகள் அடுத்த சில நாட்களில் எடுக்க வுள்ளதோடு அது குறித்து தீர்க்கமான முடிவுகள் விரைவில் வெளியாகுமென தகவல்கள் கசிந்துள்ளன.