Breaking News

பிரதமரை பதவி விலகிச்சென்று சாட்சியமளிக்குமாறு மஹிந்த எச்சரிக்கை !

தாம் ஜனாதிபதியாக பதவி வகித்திருந்தால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும், பிரதமர் சாட்சிக்கூண்டில் ஏற இடமளித்திருக்கமாட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பேருவளையில் நேற்றைய நிகழ்வொ ன்றில் கலந்து கருத்து வெளியிடுகை யில் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த மூன்று ஆண்டுகளில் பழிவா ங்கல் செயற்பாடு நடைபெற்றுள்ளது.  

இந்நிலையில், கடந்த கால பிணை முறிகள் தொடர்பில் அடுத்துள்ள இர ண்டு ஆண்டுகளில் ஆராய உள்ளதாக கூறுகின்றனர். தற்போதைய ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் மிகவும் அவதானமாக இருப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.  தாம் ஜனாதி பதியாக பதவி வகித்திருந்தால், தமது பிரதமருக்கு இவ்வாறு நேர்ந்திருத்தால், தாம் பிரதமரை அந்த இடத்திற்கு அனுப்ப அனுமதித்திருக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். 
பிரதமர் ஒருவர் உலகில் முதல் முறையாக சாட்சிக்கூண்டில் ஏறி, சாட்சிய மளிப்பது பொருத்தமல்லாத செயற்பாடாகும். எனவே, தயவுசெய்து பதவி விலகிச் சென்று சாட்சியமளித்து விட்டு வருமாறு தாம் கூறுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ஏனெனில் இதனை உலகம் கண்காணித்தவாறு இருக்கின்றது.  நாட்டுக்கு முதலீட்டாளர்கள் வருவதில் சந்தேகமாக அமையுமென மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.