Breaking News

சிறிய கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கவே புதிய உள்ளூராட்சி தேர்தல் - புத்தளத்தில் !

சிறிய கட்சிகளுக்கு சாவு மணி அடிக்கவே புதிய உள்ளூராட்சி தேர்தல்  உருவா க்கப்பட்டுள்ளது. 

அதேமுறையை வைத்து பெரிய கட்சி களுக்கு சாவுமணி அடிக்கின்ற நிலை மைக்கு, இந்த தேர்தலை மாற்ற வேண்டுமென்பதற்காக நாங்களின்றி ஆட்சியமைக்க முடியாதென்ற  நிலை மையை உணர்த்துவதற்காக உறுதி யான முடிவை எடுத்துள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலை வரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புத்தளம் முன்னாள் நகரபிதா கே.ஏ. பாயிஸ் தலைமையில் புத்தளத்தில் நடைபெற்ற “புத்தளத்தில் புத்தெழுச்சி” ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் தெரிவிக்கையில்,.....

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விதமான முறைகளில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்‌றன. 

பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானைச் சின்னத்தி லும், சிங்கள பிரதேசங்களில் எங்களுடைய ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் (துஆ) இரட்டை இலை சின்னத்திலும், சில இடங்களில் எங்களது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், அதிகமான இடங்க ளில் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறது. தெஹிய த்த கண்டிய பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் 36 கிளைகள் இருக்கின்றன.

இந்நிலையில் எந்தவொரு முஸ்லிம் வாக்குகளும் இல்லாத தெஹியத்தக ண்டிய மற்றும் பதியத்தலாவ பிரதேசசபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் இம்முறை துஆ கட்சியில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

முஸ்லிம் கட்சிகள் மூலம் சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதில் இரு க்கின்ற சிக்கல்கள் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளோம்.  அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டி யிடுகிறோம். 

அங்கு யானையில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவு செய்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம். 

அந்தளவு அதிகாரத்தை ஐ.தே.க. அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்து ள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியி டுகிறோம். என்றுமே தோற்காத அட்டாளைச்சேனை பிரதேசசபை, அக்கரை ப்பற்று மாகநகரசபை, அக்கரைப்பற்று பிரதேசசபை, சம்மாந்துறை பிரதேச சபை, காரைதீவு பிரதேசசபை, நாவிதன்வெளி பிரதேசசபை, இறக்கமாம் பிர தேசசபை போன்‌ற இடங்களில் ஐ.தே.க. வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். 

ஐ.தே.க. முகவர்களாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் நிய மிக்கப்பட்டிருக்கிறார்கள். புத்தளம் மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் வேட்பாளர்களை நியமனம்செய்யும் போது, முஸ்லிம் காங்கிரஸின் ஆதர வுத்தளம் தெரியாமல் அங்கிருக்கின்ற ஐ.தே.க. உறுப்பினர்கள் எங்களுக்கு தேவையான ஆசனங்களை வழங்குவதற்கு தயாரில்லை. 

இந்நிலையில், புத்தளத்தில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுகின்ற அமைச்சர் ஒருவர் யானைத் தந்தத்துக்கு ஆசைப்படுகிறார். ஆனால், நாங்கள் யானையில் பயணம் செய்தாலும் யானைப் பாகனாகத்தான் இருப்போம். இத னால் தான் நாங்கள் தைரியமாக புத்தளத்தில் தனித்து போட்டியிடுகிறோம்.  

முஸ்லிம் காங்கிரஸ் புத்தளத்தில் தனித்து போட்டியிடுவது புத்தளம் மக்க ளின் கெளரவத்துடன் சம்பந்தப்பட்ட விடயம். இடம்பெயர்ந்து வந்துள்ள வட புல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிட்டு புத்தளம் அபிவிரு த்தியின் தாங்களும் ஒரு பங்களார்களாக அடையாளப்படுத்துவதற்கான சந்த ர்ப்பம் இன்‌று கிடைத்துள்ளது. 

புத்தளத்தில் புத்தூக்கம் பெற்றிருக்கும் மக்கள் இன்று, முஸ்லிம் காங்கிரஸ் மூலம் பிரதேசசபையை கைப்பற்றுவதில் ஆர்வம்கொண்டுள்ளனர். புத்தளம் ஆட்சியை நாங்கள் கைப்பற்றுவோம். 

இல்லாது போனால் எங்களின் ஆதரவின்றி யாரும் ஆட்சியமைக்க முடியாத நிலையை உருவாக்குவோம். இதேபோல திருகோணமலையில் எங்களுடன் இணைந்து போட்டியிட ஐ.தே.க. விரும்பியது. நாங்கள் கேட்கும் வட்டார ங்களை தருவதற்கு ஐ.தே.க. அமைப்பாளர் தயாராக இருந்தார். 

ஆனால், முஸ்லிம் அமைச்சர் ஒருவர் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலருடன் இருக்கின்‌ற உறவை பயன்படுத்தி நாங்கள் கேட்கின்ற அதே வட்டாரங்களில் எங்களுக்கும் ஆசனம் தரவேண்டும் என்று அடம்பிடித்தார். அந்த வட்டார ங்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்குவோமே தவிர உங்களுக்கு வழங்க முடியாது என்று அமைப்பாளர் மறுத்த காரணத்தினால், தற்போது மூன்று கட்சிகளும் திருகோணமலையில் தனித்து போட்டயிடுகின்றன.

திருகோணமலையில் மூன்று கட்சிகளும் தனித்துப் போட்டியிடுவதால் யார் பலசாலிகள் என்பதை புடம்போட்டு பார்க்கலாம். முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலையிலுள்ள பல பிரதேச சபைகளை கைப்பற்றும். 

எங்களுடைய உதவி இல்லாம் திருகோணமலையில் ஐ.தே.க. ஆட்சியமைக்க முடியாதென நாங்கள் நிரூபித்துக்காட்டுவோம். அதுபோல குருநாகல் மாவ ட்டத்திலும் எங்களது வேட்பாளர்களை போடுவதில் உள்ளூர் ஐ.தே.க. உறுப்பி னர்கள் பாரபட்சம் பார்த்த காரணத்தினால் நாங்கள் அங்கும் தனித்து போட்டியி டுவதற்கு தீர்மானித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைக்கப்பட்டுள்ளனர்.