Breaking News

தவராசாவின் பதவிக்கு மீளவும் நெருக்கடியாம் - ஈ.பி.டி.பி !

வடக்கு மாகாண எதிர்க்­கட்­சித் தலை­வர் சி.தவ­ரா­சா­வின் தலை­வர் பத­வி­யைப் பறிப்­ப­தில் ஈ.பி.டி.பி. தொடர்ந்­தும் முனைப்­பு வடக்கு மாகாண சபையில் எதி ர்க்­கட்­சித் தலை­வ­ராக ஈ.பி.டி.பி. கட்­சியைச் சேர்ந்த தவ­ராசா தற்­போ­து­ வ­ரை­ அப் பதவியியை வகித்துக்கொண்டிருக்கின்றார்.  

உட்­கட்சி முரண்­பாடு கார­ண­மாக குறி த்த பத­வி­யினை தவ­ரா­சா­வி­டம் இரு ந்து பறித்து கிளிநொச்சி மாவட்ட ஈ.பி. டி.பி. உறுப்பினர் தவ­நா­த­னுக்கு வழ ங்க முயற்­சிக்­கப்­பட்ட நிலை­யில் அந்த முயற்சி தோல்வி அடைந்து தவ­ராசா எதிர்க் கட்­சித் தலை­வ­ராகத் தொடர்­கின்­றார். 

இந்த நிலை­யில் ‘‘கட்­சி­யின் கட்­டுப்­பாட்­டை­யும் முடி­வையும் மீறித் தொடர்ந்­தும் குறித்த பத­வி­யில் இருக்­கும் தங்­க­ளுக்கு எதி­ராக ஏன் ஈ.பி.டி.பி. கட்சி நட­வ­டிக்கை மேற்­கொள்­ளக் கூடாது? என்­ப­தற்கு விளக்­க­ம­ளிக்க வேண்­டும்’’ என தவ­ரா­சா­வி­டம் அந்­தக் கட்­சி­யின் நிர்­வா­கச் செய­லா­ளர் மணி­பல்­ல­வ­ரா­யன் ஒப்­ப­மிட்டு கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த விளக்கக் கடி­தத்­துக்கு பதி­ல­ளித்த வடக்கு மாகாண எதிர்க் கட்­சித் தலை­வர், ‘‘ஈ.பி.டி.பி. கட்­சி­யின் யாப்­பிலோ அல்­லது கட்­சி­யின் வரு­டாந்த மாநா­டு­க­ளிலோ நிர்­வா­கச் செய­லா­ளர் என்­னும் பொறுப்பு பரிந்­து­ரைக்­கப்­ப­ட­வில்லை. 

எனவே அவ்­வா­றான பத­வி­யின் மூலம் கேள்வி கோரும் உரித்­துக் கிடை­யாது’’ எனப் பதி­ல­ளித்து இம்மு­றை­யும் சட்ட ரீதி­யில் தப்­பித்­துக்­கொண்டார்.வடக்கு மாகாண சபை­யின் ஆயுள் காலத்­துக்கு இன்­ன­மும் 9 மாதங்­களே உள்ள நிலை­யிலும் எதிர்க்­கட்­சித் தலை­வர் பத­வி­யும் தொடர்ந்து சர்ச்­சைக்­குள் சிக்கி யுள்ளது.