இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பேச்சு வார்த்தை அடுத்த மாதம் !
இந்திய – இலங்கை கடற்படையினருக்கிடையிலான பேச்சுவார்த்தை அடுத்த மாதம் இடம்பெறவிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர் குறிப்பிட்டுள்ளார்.

இதை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி கடல் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு பிராந்திய கடற்படையின் ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், சென்னை துறை முகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான சுமித்ரா போர் கப்பலில் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்தபோது,
மேலும் தெரிவித்ததாவது: ஆழ்கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக, புதுச்சேரி மீனவர்களுக்கு ஏதேனும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டால் அவ ர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கிழக்கு பிராந்திய கடற்படை செய்து வருகிறது.
இயற்கை பேரிடர் காலங்களில் மீனவர்கள் ஆழ்கடல் பகுதியில் சிக்கி கொண்டால் அவர்களை மீட்பதற்கு கடற்படை எப்போதும் தயாராக உள்ளது. வருங்காலங்களில் மீனவர்கள் எல்லை பகுதியில் சுமுகமாக மீன் பிடிப்ப தற்கும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் அடுத்த மாதம் இல ங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவுள்ளோம்.
சென்னையில் கடற்படைத் தளம் அமைப்பதற்காக தமிழக அரசிடம் இந்திய கடற்படை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
‘ஒகி’ புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கடலில் தத்தளித்த 14 மீனவர்கள் எங்களது வீரர்களால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.