191 தொழில் உத்தியோகத்தர்களுக்கு நியமனம் !
தொழில் திணைக்களத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள 191 தொழில் உத்தியோகத்தர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
உழைக்கும் மக்களின் நன்மைக்காக ஆரம்பிக்கப்பட்ட பாரிய நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்தினை பல ப்படுத்துவதற்கு புதிதாக நியமனம் பெற்ற தொழில் உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டு மென நிகழ்வில் உரையாற்றிய ஜனா திபதி விவரித்துள்ளார்.
எண்பத்தைந்து இலட்சம் அளவிலான அரச மற்றும் தனியார் துறை உத்தியோ கத்தர்களுள் சுமார் இருபத்தாறு இலட்சம் பேர் மாத்திரமே தற்போது ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பங்களிப்பு வழங்குகின்றனர்.
கட்டாயமாக பங்களிப்பு வழங்க வேண்டிய மேலும் பத்து இலட்சம் பேர் அள வில் காணப்படுகின்றனர் என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவர்கள் அனைவரையும் பங்களிப்பு வழங்கச் செய்வதற்காக புதியதாக நியமனம் பெற்றவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
உரிய போட்டிப் பரீட்சைக்குத் தோற்றி நியமனம் கிடைக்கப் பெறாதவர்களின் எதிர்ப்பு தொடர்பாக கவனம் செலுத்திய ஜனாதிபதி அவர்கள், ஏதேனும் வகை யில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பின் அது தொடர்பாக விசாரணை யொன்றினை மேற்கொண்டு தவறினை சீர்செய்து அவர்களுக்கு நீதியைப் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
இத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு உரிமைகளையும் வர ப்பிரசாதங்களையும் உரியவாறு வழங்கி உத்தியோகத்தர்கள் சிறந்த சேவையை வழங்கக்கூடிய பின்னணியினை ஏற்படுத்திக் கொடுக்க அரசா ங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அறிக்கை விடுத்து ள்ளார்.
நியமனக் கடிதம் வழங்குதல் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தொழில், தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபி.டீ.ஜே. செனெவிரத்ன, அமைச்சின் செயலாளர் எஸ்.ஏ.என். சரணதிஸ்ஸ, தொழில் ஆணையாளர் நாயகம் ஏ.விமலவீர உள்ளிட்டோர் இந்நிகழ்வை கலந்து சிறப்பித்துள்ளனர்.