கதிரைப் பங்கீடு – தமிழரசுக்கட்சிக்குள் குழப்பம் நிலவுவதாக அதன் ஊடகம் தெரிவிப்பு !
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீடு தொடர்பில், முதன்மைப் பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் மட்டத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் ஊடகம் தகவல் தெரி வித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆசனப் பங்கீட்டில் முதல் சுற்றில் 80 சதவீத இணக்கம் எட்டப்பட்டிருந்தது. இரண்டாம் சுற்றில் ஏற்கனவே எட்டப்பட்ட இணக்கமும் இல்லாமல்போனது.
இதனையடுத்து பங்காளிக் கட்சிகளுள் ஒன்றான ரெலோ, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்ள முடியாதென தெரிவித்து ள்ளது.
இதனையடுத்து ஏற்பட்ட பிணக்கை சரி செய்யும் நோக்குடன், கொழும்பில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டது.
எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்காளிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர் பங்காளிக் கட்சிகள் கோரியதற்கும் அதிகமான உள்ளூராட்சி மன்றங்கள், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் விட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதாக உள்ளுர் தலைவர்களால் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாலோசிக்காமல், கட்சித் தலைமை உள்ளூராட்சி மன்றங்களைத் தாரை வார்த்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் நகர சபை ரெலோவுக்கு முன்னர் வழங்கப்பட்டது.
கடும் எதிர்ப்பை அடுத்து பின்னர், இரண்டு ஆண்டுகள் தமிழ் அரசுக் கட்சிக்கும், எஞ்சிய இரண்டு ஆண்டுகள் ரெலோவுக்கு என மாற்றப்பட்டது.
ஆனால் இத் தீர்மானத்தையும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லையென தமிழ் அரசுக் கட்சியின் மன்னார் மாவட்டக் கிளையினர் போர்க் கொடி தூக்கியுள்ளனர்.
கட்சித் தலைமைக்கு எழுத்து மூலமான கடிதமும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசனப் பங்கீட்டை ஏற்க முடியாதெனவும் இதனை மாற்றியமை க்க வேண்டுமெனவும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு ள்ளது.