Breaking News

தொலைக்காட்சி நாடகத்தால் பலியான சிறுமி !

தொலைக்­காட்சி நாடக தொடரை பார்த்து, அதில் வரும் கதா­பாத்­தி­ரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயி­ரி­ழந்த சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

கர்­நா­டக மாநிலம் தாவ­ண­கெரே மாவ ட்டம் ஹரி­ஹரா டவுனைச் சேர்ந்­தவர் மஞ்­சுநாத். (கூலித் தொழி­லா­ளி)­ சைத்ரா ஆகியோரின் மகள் பிரார்த்­தனா (வயது 7) 2- ஆம் வகுப்பில் கல்வி கற்று வந்­துள்ளாள். 

வீட்டில் தொலைக்­காட்­சியில் ஒரு குறிப்­பிட்ட கன்­னட நாட­கத்தை பார்ப்­ப­தனை வழக்­க­மாக கொண்­டி­ருந்­துள்­ளனர். இந்த நாட­கத்தில் நடிகை ஒருவர் தன் கை, கால்­களில் தீ வைத்து, தீப்­பந்தம் ஏந்தி நட­ன­மாடும் காட்­சிகள் வந்துள்ளன. அதைப் பார்த்த பிரார்த்­தனா, தானும் கையில் ஒரு பேப்­பரை எடு த்து தீ வைத்­துக்­கொண்டு நட­ன­மா­டி­யுள்ளாள். அப்­போது பிரார்த்­த­னாவின் ஆடையில் தீப்­பற்­றி­யுள்­ளது. வலி தாங்க முடி­யாமல் சிறுமி அல­றிய சத்தம் கேட்டு அக்கம் பக்­கத்­தினர் ஓடி­வந்து, சிறு­மியின் உடலில் பற்­றி­யி­ருந்த தீயை அணைத்து அரச மருத்­து­வ­ம­னைக்கு சிறு­மியைக் கொண்டு சென்­றுள்­ளனர். 

 கடந்த 15 நாட்­க­ளுக்கு மேலாக தீவிர சிகிச்சை அளிக்­கப்­பட்­டு ­வந்த நிலையில், பிரார்த்­தனா சிகிச்சை பல­னின்றி நேற்று முன்­தினம் இறந்தாள். இதை­ய­டுத்து, சிறு­மியின் தந்தை மஞ்­சுநாத் அளித்த புகா­ரின்­பேரில் ஹரி­ஹரா டவுன் பொலிஸார் வழக்­குப்­ப­திவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கின்­றனர். 

பிரார்த்­த­னாவின் தந்தை மஞ்­சுநாத் இது தொடர்பில் கூறு­கையில், ‘‘குழந்­தை­களை தொலைக்காட்சி நாடகம் பார்ப்­பதை தடுக்க வேண்டும். நான் என் மகளை கண்­கா­ணிக்கத் தவ­றி­ விட்டேன். என் மகள் உடலில் தீ வைத்து நட­ன­மாடி உயி­ரி­ழந்­தி­ருக்­கிறாள். 

இத்­த­கைய சம்­ப­வங்கள் இனியும் தொட­ராத வகையில் அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார். Share1 TAGS தொவைக்காட்சி நாடகம் கதாபாத்திரம் சிறுமி தீ பலி கர்நாடகா இந்தியா RELATED NEWS தொலைக்காட்சி நாடகத்தால் பறிபோன சிறுமியின் உயிர் தொலைக்­காட்சி நாடக தொடரை பார்த்து, அதில் வரும் கதா­பாத்­தி­ரத்தைப் போல தீ நடனம் ஆடிய 7 வயது சிறுமி, உடல் கருகி உயி­ரி­ழந்த சம்­பவம் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

2017-12-02 10:54:19 தொலைக்காட்சி நாடகம் கதாபாத்திரம் சமுத்­தி­ரங்­களில் பிளாஸ்டிக் சேர்­வது தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்மை சமுத்­தி­ரங்­களிலான பிளாஸ்டிக் மாசாக்கம் தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்­மையை கடை­ப்பி­டிப்­பது குறித்து கென்ய நைரோபி நகரில் இடம்­பெற்ற ஐக்­கிய நாடுகள் சபையின் சுற்­றுச்­சூழல் தொடர்­பான உச்­சி­மா­நாட்டில் இணக்கம் காணப்­பட்­டுள்­ளது.  

2017-12-02 10:32:08 சமுத்திரங்கள் பிளாஸ்டிக் நைரோபி பாகிஸ்­தானில் விவ­சாய பல்­க­லைக்­க­ழக விடு­தியில் தலிபான் தீவி­ர­வா­திகள் தாக்­குதல் பாகிஸ்­தானின் பெஷாவர் நக­ரி­லுள்ள விவ­சாய பல்­க­லைக்­க­ழக விடு­தியை இலக்­கு­வைத்து 4 தீவி­ர­வா­திகள் நேற்று வெள்­ளிக்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 9 பேர் பலி­யா­ன­துடன் 36 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர். 

2017-12-02 10:27:33 பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் சவுதி எண்ணெய் கப்பல் மோதியதில் பாம்பன் மீனவர் நடுக் கடலில் மாயம் சவுதியில் மீன்பிடி க்கச் சென்ற பாம்பன் மீனவர் நடுக்கடலில் மாயமானர் இதனால் ராமநாதபுரம் மாவட்ட கடலோர மீனவக்கிராமங்களில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

2017-12-01 15:00:54 சவுதி கப்பல் மீனவர் கடல் சீற்றம்காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை கடலாடி தாலுகாவில் உள்ள மூக்கையூர் மற்றும் ரோஜ்மாநகர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடலோரப் பகுதியிலிருந்து கடல் சீற்றம் காரணமாக இரண்டாம் நாளாக மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லையென எமது செய்தியாளர் தெரிவித்தார். 

2017-12-01 13:20:03 Search Articles... TOP STORIES இலங்கைக்கு எதிரான டெஸ்டில் சாதனையொன்றை நோக்கி இந்தியா 2017-12-02 10:58:48 ஆஷஸ் டெஸ்ட் இரண்டாவது போட்டி இன்று ஆரம்பம் 2017-12-02 10:42:56 சிறு­மியை கடத்தி துஷ்­பி­ர­யோகம் இரு­வ­ருக்கு 18,27 வருட கடூ­ழியம் 2017-12-02 10:39:23 மஹிந்த ஆட்­சியை கவிழ்க்­கவே ரணில் -– மைத்­திரி கூட்­ட­ணி­ : திஸ்ஸ 2017-12-02 10:36:37 சமுத்­தி­ரங்­களில் பிளாஸ்டிக் சேர்­வது தொடர்பில் பூச்­சிய சகிப்­புத்­தன்மை 2017-12-02 10:32:08