Breaking News

ஸ்ரீல.சு.க.,கூட்டு எதி­ரணி இன்று பேச்­சு­வார்த்தை !

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டு­வது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி மற்றும் பொது எதி­ரணி ஆகி­ய­வற்­றுக்கு இடை­யி­லான பேச்­சு­வா­ர்த்தை இன்று நடைபெறவுள்ளது. 

அந்­த ­வ­கையில் பொது இணக்­கப்­பாடு ஒன்றை இப்­பேச்­சு­வார்த்­தை­களின் ஊடாக ஏற்­ப­டுத்த முடியுமென இரு தர ப்­பி­னரும் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ள னர். அடுத்த ஆண்டு ஆரம்­பத்தில் நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் பொது எதி­ர­ணியும் இணைந்து செயற்­ப­டு­வது குறித்து தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தைகள் தொடர்ந்த போதிலும் இது ­வ­ரையில் உறு­தி­யான தீர்­மானம் ஒன்று எட்­டப்­ப­டாத நிலை­யி­லேயே அனைத்துப் பேச்­சு­வார்த்­தை­களும் முடி­வ­டைந்­துள்­ளன. 

 இந்­நி­லையில் இன்று மீண்டும் இரு தரப்­பி­னரும் பேச்­சு­வார்த்­தை­களை நடத்­த­வுள்­ளனர். இப்பேச்­சு­வார்த்­தை­களில் பொது இணக்­கப்­பாடு ஒன்­றினை எட்­டு­வ­தற்கு முயற்­சிப்­ப­தா­கவும், அதற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் இரு தரப்­பி­னரும் தெரிவித்துள்ளனர். 

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பொதுச் ­செ­ய­லாளர் மஹி ந்த அம­ர­வீர கூறு­கையில், பொது எதி­ர­ணி­யி­னரை இணைத்­து ­கொண்டு ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக நாம் பல­மான கட்­சி­யாக கள­மி­றங்க வேண்டும் என்­பதே எமது பிர­தான நோக்­க­மா கும். அதற்­கான முயற்­சி­க­ளையே நாம் முன்­னெ­டுத்து வரு­கின்றோம். ஸ்ரீல ங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள குழு­வினர் தொடர்ச்­சி­யாக பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­துடன் இப்­போது பல்­வேறு விட­யங்­களில் இணக்கப்­பாடும் எட்­டப்­பட்­டுள்­ளது. 

எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான உடன்­ப­டிக்­கைகள், நிபந்­த­னைகள் என்­ப­வற்றில் இரு தரப்­பி­னரும் இணக்கம் காணும் பல்­வேறு கார­ணிகள் காணப்படுகின்றன. 

எவ்­வாறு இருப்­பினும் நாளை ( இன்று) இடம்­பெறும் இரு கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான சந்­திப்பில் இறு­தி­யான இணக்­கப்­பாடு ஒன்று எட்­டப்­படுமென எதிர்­பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.  

பொது எதி­ர­ணியின் சார்பில் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்த யாப்பா அபே­வர்­தன கூறு­கையில், உடன்­ப­டிக்கை ரீதியில் இணக்கம் எட்­டப்­ப டும் விட­யங்­களில் சாத­க­மான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இது­வரை நடைபெற்ற சந்­திப்­புக்­களில் பல்­வேறு இணக்­கப்­பா­டுகள் காணப்­ப­டு­கின்­றன. 

எனினும் கொள்கை ரீதியில் இன்னும் இரு தரப்­பினர் மத்­தி­யிலும் இணக்கம் எட்­டப்­ப­ட­வில்லை. கொள்கை ரீதியில் இணக்கம் எட்­டப்­ப­டு­வது குறித்து பொது எதி­ர­ணியின் சகல உறுப்பினர்களுடன் இணைந்து கலந்துரையாடி வரு கின்றோம். 

அனைவரதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே தீர்மானம் எடுக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் நாளைய (இன்று) சந்திப்பு இரு தரப்பினருக்கும் இண க்கம் காணக்கூடிய வகையில் அமையுமென எதிர்பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.