சம்பந்தனிற்கு மேலாக தமிழ் மக்களின் சேவகன் தான் என்கிறார் கோட்டபாய!
தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரிலும் விட தாம் தமிழ் மக்களுக்கு சேவையாற்றியுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விவரித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரி வித்துள்ளார்.
எளிய என்ற அமைப்பு இனவாத அமைப்பென அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கரு த்து வெளியிட்டிருந்தார்.
அவர் நேர்மையான மற்றும் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியாக காணப்ப டுபவர். கடந்த காலத்தில் நடைபெற்ற பிரிவினைவாத யுத்த சூழல் காரண மாக அவரால் தமிழ் மக்களுக்கென எதனையும் செய்ய முடியவில்லை.
தாங்கள் இனவாதமாக செயற்படவில்லை. சம்பந்தனே இனவாதப் போக்கில் செயற்படுகின்றார்.
அவரிலும் பார்க்க பெரும் சேவைகளை தமிழ் மக்களுக்காக தாம் செய்துள்ள தாக கோட்டாபய ராஜபக்ஷ ஆதங்கம். எளிய அமைப்பின் மூலம் தீவிரவா தத்தால் பிரிப்பதற்கு முயற்சிக்கப்பட்ட நாட்டை ஒருமித்த நாடாக அனைத்து மக்களுக்கும் எதிர்கால தலைமுறையினருக்கும் கொண்டு சேர்க்க முயற்சி கள் முன்னெடுக்கப்படும்.
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் கௌரவமாக வாழ்வதற்கான உரிமை தொடர்பில் எமக்கு பிரச்சினை இல்லை.
இந்நாட்டின் அனைத்து பகுதி களிலும் அனைத்து மக்களும் வாழ்வதற்கான உரிமையை பெற்றுள்ளனர் என்பதனை உறுதிப்படுத்துவதற்காகவே இந்நாடு ஒருமித்த நாடாக இருக்க வேண்டுமென தாம் எதிர்ப்பார்ப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ மேலும் தெரி வித்துள்ளார்.