Breaking News

சுரேஸின் கருத்துக்குப் பதில் அளிக்க வேண்டிய தேவையில்லையாம் – மாவை !

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து செல்வதாக தெரிவித்துள்ள  சுரேஸ் பிரேமச்சந்திரனின் கருத்துக்குப் பதில் அளிக்க வேண்டிய அவசிய மில்லையெனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், தமிழ் மக்களின் ஒற்றுமை க்காக, கட்சிகளுக்கு அப்பால், எமது மக்களின் கொள்கைக்காகவும், இல ட்சியத்திற்காகவும், மண்ணின் விடு தலைக்காகவும், மக்களின் விடுதலை க்காகவும், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டியது மிக முக்கிய மானதென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.  

இலங்கை தமிழரசு கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று (22.11) மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி பிரிந்து செல்வது தொடர்பாக ஊடகவியலா ளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்து ள்ளார்.  

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்று இருந்த காலத்தில் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் சிறந்ததாக அமைந்திருந்தது. 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்த சில கட்சிகள் கூட்ட மைப்பில் சேரவில்லை. உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை தேர்தல்களிலும் கூட்டமைப்பில் இருந்த 4 கட்சிகளை தவிர்ந்த வெளியில் இருந்த கட்சிகளு டனும் இணைந்து செயற்பட்டோம். 

சிலர் எமது கூட்டணியில் இருந்தும் பிரிந்து செயலாற்றி வந்துள்ளார்கள். தற்போது, ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து தேர்தலில் ஈடுபட வேண்டுமென்ற தீர்மானத்தினை எடுத்திருக்கி ன்றார்கள். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பு வாய்ந்த எமது தலைமையோ, தமிழரசுக் கட்சி தலைமையோ எவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. 

அவ்வாறான எந்த தீர்மானத்தினையும் எடுக்கவில்லை. தனியான கட்சி எது க்கும் மாறாக செயற்படவில்லை. இந்த தேர்தலுக்காக மட்டும் ஒன்றுபடு வதைப் பற்றிப் பேசுவதல்ல. 

தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ்வதற்கு கட்சிகளுக்கு அப்பால், எமது மக்கள் கொள்கைக்காகவும், இலட்சியத்திற்காகவும், மண்ணின் விடுதலை க்காகவும், மக்களின் விடுதலைக்காகவும், மக்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டுமென்று மிக முக்கியமாக கருதுகின்றோம். 

ஓற்றுமையாக ஒரு தேசிய கூட்டமைப்பு உருவாகிய பொழுது புளொட் அமைப்பு அப்போது இணைந்திருக்கவில்லை. கடந்த உள்ளூராட்சி தேர்தலின் போது, புளொட் அமைப்பினை இணைக்க வேண்டிய சூழ்நிலை கருதி, புளொட் அமைப்பினை இணைத்து செயற்பட்டு வருகின்றோம். 

இன்றும் பல கட்சிகள் எம்மோடு இணைந்து செயற்பட விரும்புகின்றார்கள். அவற்றினை எல்லாம் பரிசீலித்து மக்களின் ஒற்றுமைக்காக என்றும் செய ற்படுவதற்கு ஆயுத்தமாக உள்ளோம். 

சுரேஸ் பிரேமச்சந்திரன் அதிகமாக பேசியிருக்கின்றார். அவரின் கருத்து க்களுக்கு இதுவரையில் எந்தவித பதில்களும் வழங்கவில்லை. காரணம் எமது ஒற்றுமை கருதி, எனவே, அவர் சொல்லும் கதைகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லையெனத் தெரிவித்துள்ளார்.