இந்தியாவில் உயர்ந்த செடிகளைக் கடித்த 8 கழுதைகளுக்கு சிறைத் தண்டனை !
இந்தியா உத்தர பிரதேசத்தில் விலை உயர்ந்த செடிகளை கடித்தாகக் கூறி எட்டு கழுதைகளை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
ஜலாவுன் மாவட்டத்திலுள்ள உராய் சிறை வளாகத்தில் அழகுக்காக வைக்கப்பட்டு இருந்த விலை உய ர்ந்த செடிகளை சில கழுதைகள் தின்று விட்டதாக கூறப்படுகிறது.
இதன் விலை இந்திய ரூபாவில் சுமார் 5 லட்சம் ஆகும்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிறை நிர்வாகம் கழுதைகளை பிடித்து சிறையில் அடை த்தனர். இந்நிலையில் கழுதைகளை காணாமல் தவித்த உரிமையாளர் கைது செய்ய ப்பட்ட எட்டு கழுதைகளை விடுவிக்க கோரினார்.
இதனை சிறை நிர்வாகம் ஏற்க மறுத்து விட்டது.
இறுதியில் நான்கு நாட்கள் சிறை வாசத்தி ற்கு பின் கழுதைகள் விடுவிக்கப்பட்டன.