Breaking News

தமிழன் நாட்டை ஆண்டிருந்தால் பௌத்த மக்களிற்கு பாதுகாப்பாம் – ஞான சார தேரர் !

தமி­ழன் நாட்டை ஆட்சி செய்­தி­ருந்­தால் பௌத்த மக்­க­ளைச் சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான். இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் கவலையடைந்துள்ளார்.  

கொழும்­பில் இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பில் இது தொடர்­பில்  மேலும் தெரி­விக்கையில்.... 

நாடு சுதந்­தி­ரம் பெற்று 70 ஆண்­டு­க­ளா­கி­யும் அடிப்­ப­டை­ வாத்­தில் இருந்து சுதந்­தி­ரம் பெற­மு­டி­ய­வில்லை. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பாக பேசு­ப­வர்­கள் அதில் சரியா சட்­டம், பர்தா விவ­கா­ரம் மற்­றும் ஹலால் உள்­ளிட்­டவை ஒழிக்­கப்­ப­ட­ வேண்­டும் என்­ப­தைக் கூற­வில்லை. எமது தலை­வர்­க­ளின் செயற்­பா­டு­கள் மிக­வும் இழி­வாக உள்­ளன. ஒரு தமி­ழன் நாட்டை ஆண்­டி­ருந்­தால் நிச்­ச­ய­மாக இவ்­வா­றன அடிப்­ப­டை ­வா­தத்­திற்கு இட­ம­ளிக்­காது பௌத்த மக்­களை சிறந்த வகை­யில் பாது­காத்­தி­ருப்­பான் – என்­றார்.