Breaking News

நீர்மூழ்கிக் கப்பல் மாயமான பகுதியில் வெடிப்புச் சம்பவம் - 44 பேரைக் காணவில்லை!

ஆர்ஜன்டினாவுக்கு உரித்தான  நீர்மூழ்கிக் கப்பல் காணாமல் போன பகுதியான தெற்கு அட்லான்டிக் சமுத்திரத்தில் பாரிய வெடிப்புச் சம்பவமொன்று பதிவாகி யுள்ளது. 

இவ் வெடிப்புச் சம்பவத்தை அமெரி க்கா உட்பட அணு ஆயுதம் தொட ர்பான மத்திய நிலையமும் உறுதிப்ப டுத்தியுள்ளன. 

குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் ஏற்ப ட்டது வெடிப்பா அல்லது கடலுக்கு அடியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவமா என்பது பற்றிய இறுதியான தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. 

இருந்த போதிலும் குறித்த நீர்மூழ்கிக் கப்பலில் 44 பேர் பயணித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா இல்லையா என்பதும் இது வரை உறுதியாகவில்லை. 

கடந்த புதன்கிழமை அரா சேன் ஜுவான் (ARA San Juan) என்ற பெயர்கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா, ரஷ்யா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளனர்.