Breaking News

புலிகளுக்காக கட்சியை உடைத்தார் சுரேஸ் – வரதராஜப் பெருமாள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளால் உரு வாக்கப்பட்டதென்பது தவறான கருத்து, தங்களது முயற்சியால் உருவானது என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பல தடவைகள் தெரிவித்துள்ளார். 

என்று வரதராஜப் பெருமாள் தெரி வித்துள்ளார். வரதராஜப் பெருமாள் தலைமையிலான குழுவினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைவது தொடர்பாக செய்திகள் வெளிவந்த நிலையில் அரசாங்கத் தமிழ் பத்திரி கைக்கு வரதராஜப்பெருமாள் அவ ர்கள் வழங்கிய செவ்வி ஒன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். ஈபிஆர்எல்எவ் பிளவு தொடர்பாக கரு த்துத் தெரிவித்த முன்னாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்க முன்னரே 1999ஆம் ஆண்டு புலிகளாலேயே ஈபிஆர்எல்எவ் பிளவுபட்டதென்றார். 

சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் புலிகளின் கட்டுப்பாட்டிலான ஒரு அமை ப்பாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியைக் கொண்டு செல்ல முற்பட்டார். அதற்கு வசதி யாக அவர் ஈழமக்கள் புரட்சிகர விடு தலை முன்னணியை உடைத்தார் என்று வரதராஜப் பெருமாள் குற்றஞ்சாட்டினார். 

இன்னொரு கேள்விக்குப் பதிலளித்த வரதராஜப்பெருமாள் அவர்கள் கடந்த காலங்களில் தமிழ் தேசியக்கூட்ட மைப்பில் இணைந்து செயற்படுவத ற்கான பல்வேறுபட்ட முயற்சிகளை மேற்கொண்டபோது எங்களுக்கு ஆத ரவாக ரெலோ மற்றும் புளொட் அமை ப்புகள் தமிழ்க்கூட்டமைப்புக்குள் இரு ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. அதேபோல தமிழர சுக் கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜாவும் அந்த விருப்பத்தை எங்க ளுக்குத் தெரிவித்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றார். 

ஆனால் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள்தான் இதற்கு தடையாக இருந்தார். எனக் குறிப்பிட்டுள்ளார். இதே வேளை சில நாட்களுக்கு முன்பு திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் கலந்து கொண்ட பொதுமக்கள் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின்பேரில் வரதராஜப்பெருமாள் அவர்களும் கல ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.