Breaking News

மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது

மத்திய குழு கூட்டத்தை அடுத்து சுரேஷ் குற்றச்சாட்டு 

மக்கள் வழங்கிய ஆணையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறி விட்டது. உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தலை எவ்­வாறு எதிர்­கொள்­வது என்­பது குறித்து கட்­சியின் அர­சியல் குழு கூடி தீர்­மா­னிக்கும் என்று ஈ.பி­.ஆர்­.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்தி ரன் தெரிவித்துள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எவ். மத்திய குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தலை­மையில் வவு­னியா இந்­திரன் விடு­தியில் ஐந்து மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்­றது. 

வடக்கு கிழக்கு மாகா­ணங்­களின் எட்டு மாவட்­டங்­க­ளையும் சேர்ந்த மத்­திய குழு உறுப்­பி­னர்கள் இதில் கலந்து கொண்­டி­ருந்­தனர். சம­கால அர­சியல் சூழ ல்கள், புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பான இடைக்­கால அறிக்கை, அதில் உள்ள பல்­வேறு விட­யங்கள் உட்­பட பல விட­யங்கள் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூட்டம் முடி­வ­டைந்­ததன் பின்னர் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய கட்­சியின் தலைவர் சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்தார். 

செய்­தி­யா­ளர்­க­ளு­ட­னான இந்தச் சந்­திப்பில் கட்­சியின் செய­லா­ளரும் பாராளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய சிவ­சக்தி ஆனந்தன், மட்­டக்­க­ளப்பில் இருந்து வருகை தந்­தி­ருந்த மத்­திய குழு உறுப்­பினர் ஆர்.துரை­ரத்­தினம், மன்­னாரில் இருந்து வருகை தந்­தி­ருந்த ஆர்.குமரேஸ் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இந்த மத்­திய குழு கூட்டம் குறித்து சுரேஸ் பிரே­மச்­சந்­திரன் மேலும் தெரி­வித்­த­தா­வது: சம­கால அர­சியல் சூழல் பற்­றியும், புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்கை, இந்த விட­யங்­களில் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தொடர்பில் தமி­ழ­ர­சுக்­கட்சி மேற்­கொண்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் குறித்து பல்­வேறு விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­ட­டன. 

மாகாண சபைத் தேர்தல் பாரா­ளு­மன்றத் தேர்­தல்­களின் தேர்தல் அறிக்­கையில் வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இணைக்­கப்­பட்டு ஒரு மாகா­ண­மாக இருக்க வேண்டும், தமிழ் மக்­களின் சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும், தமிழ் மக்­க­ளு­டைய சுய­நிர்­ணய உரிமை மற்றும் இறை­யாண்மை என்­பன ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்டும், 

தமிழ் மக்­க­ளுக்கு முழு­மை­யான அதி­காரப் பகிர்­வுடன் கூடிய ஒரு சுயாட்சி உரு­வாக்­கப்­பட வேண்டும் என்­பது போன்ற விட­யங்­களைக் குறிப்­பிட்டு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அதற்­கான மக்கள் ஆணை பெறப்­பட்­டது, ஆனால், தமிழ் மக்­க­ளு­டைய முக்­கி­ய­மாக இந்தக் கொள்­கைகள் எல்லாம் கைவி­டப்­பட்­டுள்­ளன. 

குறிப்­பாக புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கையில் வட­கி­ழக்கு இணைப்பு என்­பதும், சமஸ்டி என்­பதும் கைவி­டப்­பட்ட நிலையில், கூட்­ட­மைப்­புக்கு மக்கள் கொடுத்த ஆணையில் இருந்து தமி­ழ­ர­சுக்­கட்சி வெளி­யே­றி­யி­ருக்­கின்­றது என்­பதை மத்­திய குழு கூட்­டத்தில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் சுட்­டிக்­காட்­டி­னார்கள். 

இவ்­வா­றான சூழல் என்­பது ஆரோக்­கி­ய­மான விட­ய­மல்ல. தங்­க­ளு­டைய எதிர்­காலம் உரி­மைகள் தொடர்­பாக கூட்­ட­மைப்பு ஒரு முழு­மை­யான தீர்­மா­னத்­திற்கு வரும் என்று தமிழ் மக்கள் எதிர்­பார்த்­துள்ள போதிலும், 

தமி­ழ­ர­சுக்­கட்சி கூட்­ட­மைப்பில் உள்ள ஏனைய கட்­சி­க­ளுடன் ஆலோ­சிக்­காமல் அவர்கள் தனித்து தான்­தோன்­றித்­த­ன­மான முறையில் முடி­வுகள் எடுப்­பதன் ஊடாக கொள்­கைகள் அனைத்தும் கைவி­டப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதும் கூட்­டத்தில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. 

அது மட்­டு­மல்­லாமல், மக்கள் மத்­தியில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைகள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் விடயம் அர­சியல் கைதிகள் விடயம் என்­ப­வற்­றுக்குத் தீர்வு காணப்­படாமை குறித்தும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன. 

அர­சியல் கைதிகள் விட­யத்தில் குறைந்­த­பட்சம் அனு­ரா­த­பு­ரத்தில் உள்ள அவர்­க­ளு­டைய வழக்­கு­களை மீண்டும் வவு­னி­யா­வுக்கு மாற்ற முடி­யாமல் இருக்­கின்­றது. இந்த விட­யத்­தில்­கூட தங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை மாற்ற முடி­யா­த­வாறு, அர­சாங்கம் அர­சாங்கம் உறு­தி­யாக இருப்­பது போன்ற நிலை­மைகள் மிகவும் கண்­டிக்­கப்­பட வேண்டும் என்ற கருத்தும் முன்­வைக்­கப்­பட்­டது. 

அர­சாங்கம் கூறு­கின்ற நல்­லெண்ணம் எல்லாம் அர­சாங்­கத்­தி­னா­லேயே குழி­தோண்டி புதைக்­கப்­ப­டு­கின்­றது என்ற கருத்தும் எமது மத்­தி­ய­குழு தோழர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டது. 

அது மட்­டு­மல்­லாமல் நேற்­றைய தினம் வவு­னி­யா­வுக்கு விஜயம் செய்த ஜனா­தி­பதி அவர்­க­ளினால் நாமல்­கம, கலா­போ­கஸ்வௌ போன்ற இடங்­களில் யுத்­தத்­திற்குப் பிற்­பாடு, சிங்­களப் பகு­தி­களில் முக்­கி­ய­மாக அம்­பாந்­தோட்டை போன்ற பகு­தி­களில் இருந்து கொண்டு வந்து குடி­யேற்­றப்­பட்ட அதா­வது தமிழ்க்­கி­ரா­மங்­களை கப­ளீ­கரம் செய்து சிங்­கள மக்­க­ளுக்கு தாரை­வார்த்துக் கொடுப்­பது போன்று, அந்தக் காணி­க­ளுக்கு காணி உறு­திகள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

தமிழ் மக்­க­ளு­டைய பிர­தே­சங்கள் இந்த நல்­லாட்சி அரசு என்று சொல்­லப்­ப­டு­கின்ற இந்த அர­சாங்­கத்­தில்­கூட எந்­த­வி­த­மான மாற்­றங்­களும் இல்­லாமல் என்­னென்ன விட­யங்­களை ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ச தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மாகச் செய்­தாரோ, அதே விட­யங்­க­ளுக்­காக, தமிழ் மக்­க­ளு­டைய காணி­க­ளுக்கு சிங்­கள மக்­க­ளுக்கு காணி உறு­திகள் வழங்கும் நட­வ­டிக்கை நேற்று நடை­பெற்­றுள்­ளது. 

இந்த நிகழ்வில் சுமந்­திரன், செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் கலந்து கொண்­டி­ருந்­த­மை­யா­னது, இவர்கள் எல்­லோரும் சேர்ந்து தமிழ் பூமியை சிங்­கள பூமி­யாக மாற்­று­வ­தற்கு அர­சுடன் உடந்­தை­யாகப் போகின்­றார்­களா என்ற கேள­்வியும் மத்­திய குழு உறுப்­பி­னர்­க­ளினால் முன்­வைக்­கப்­பட்­டது, ஆகவே நடக்­கின்ற விட­யங்கள் ஆரோக்­கி­ய­மான விட­யங்­க­ளல்ல. 

முக்­கி­ய­மாக கூட்­ட­மைப்பு என்ற பெயரில் தமி­ழ­ர­சுக்­கட்சி மிகவும் தான்­தோன்­றித்­த­ன­மான முறையில் இந்த விட­யங்­களைக் கையாள்­வ­துடன் அந்த விட­யங்­களை தமிழ் மக்­க­ளுக்கு விரோ­த­மான முறையில் செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்துச் செல்­கின்­றது என்ற அடிப்­ப­டையில் இது தொடர்­பான முடி­வு­களை ஈழ மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி விரை­வாக எடுக்க வேண்டும் என்றும் மத்­திய குழு உறுப்­பி­னர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்கள். 

இதனையடுத்து, இது தொடர்பாக ஆராய்ந்து சரியான முடிவு எடுப்பதற்காக கட்சியினுடைய மாநாடு டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மா னம் எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயம் குறித்து அரசியல் சபையும் முடி வுகளை மேற்கொள்ளும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படலாம் என்றி ருந்தாலும் அது பின்போடப்படலாம் என்ற நிலைமை இருக்கின்றது. இது பற்றி யும் கலந்துரையாடப்பட்டது. 

உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கட்சியின் அரசியல் குழு கூடிமுடிவெடுக்க வேண்டும் என்று தீர்மா னிக்கப்பட்டிருக்கின்றது என்றார் சுரேஸ் பிரேமச்சந்திரன்.