Breaking News

நீதிக்­காக காத்­தி­ருந்த இரு தாய்மார் மரணம்

சட்­டத்­த­ர­ணியின் உருக்­க­மான வாதத்தில் கண் கலங்­கிய நீதிவான் 

ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட 11 பேர் கடத்தல் விவ­கா­ரத்தில், தமது பிள் ளைகள் மற்றும் உற­வுகள் காணாமல் ஆக்­கப்­பட்­ட­மைக்கு நீதி கிடைக்கும் என காத்­தி­ருந்த இரு தாய்­மார்கள், காணாமல்போன உற­வு­களின் ஏக்­கத்­தி­லேயே மர­ண­ம­டைந்­துள்­ள­தாக பாதிக்­கப்பட்டோர் தரப்பில் மன்றில் ஆஜ­ராகும் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன கோட்டை நீதிவான் லங்காஜ­ய­ரத்­னவின் கவ­னத்­துக்கு நேற்று கொண்டு வந்தார். 

ஐந்து மாணவர் உள்­ளிட்ட 11 பேர் கட த்தல் விவ­காரம் தொடர்பில் வழக்கு விசா­ரணை நேற்று கோட்டை நீதி வான் லங்க ஜய­ரத்ன முன்­னி­லை யில் விசா­ர­ணைக்கு வந்த போதே அவர் இதனைத் தெரி­வித்தார். இதன்­போது அது தொடர்பில் ஆழ்ந்த அனு தா­பங்­களை தெரி­வித்த நீதிவான் லங்கா ஜய­ரத்ன, விசா­ர­ணைகள் தற்­போது துரி­த­மாக இடம்­பெ­று­வ­தா­கவும், இயன்­றவை விரை­வாக நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே தான் முயற்­சிப்­ப­தா­கவும் கண் கலங்­கிய நிலையில் தெரி­வித்தார். ஆரம்­பத்தில் சட்­டத்தை அமுல் செய்­வதில் தாம­தங்கள் இரு ந்தை ஒப்­புக்­கொண்ட நீதிவான் தற்­போது சந்­தேக நபர்கள் பலர் கைதாகி­யுள்ள நிலையில் அந் நிலைமை மாற்­ற­ம­டைந்­துள்­ள­தா­கவும், தாய்மார் இருவர் நீதிக்­கான ஏக்­கத்­தி­லேயே மனம் வருத்­த­துடன் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் எனவும் அது தொட ர்பில் தான் கவ­லை­ய­டை­வ­தா­கவும் நீதிவான் சுட்­டிக்­காட்­டினார். 

நேற்று வழக்கு விசா­ர­ணைகள் ஆரம்­ப­மான போது பாதிக்­கப்பட்ட தரப்பின் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரத்ன, விஷேட கருத்­து­ரையை முன்­வைத்து பின்­வ­ரு­மாறு கூறினார். 

கனம் நீதிவான் அவர்­களே, 

இந்த வழக்கில் சந்­தேக நப­ரான தஸ­நா­யக்­க­வுக்கு எந்த நோயும் இல்லை என சட்ட வைத்­திய அதி­கா­ரியின் அறிக்­கை­யூ­டாக தெளி­வா­கி­யுள்ள நிலையில், அவர் நீதி­மன்றை தவ­றாக வழி நடாத்தி தொடர்ந்தும் கடற்­படை வைத்­தி­ய­சா­லையில் தங்­கி­யுள்ளார். 

ஏன் அவ­ருக்கு மட்டும் இப்­படி விஷேட சலுகை வழங்­கப்பட்­டுள்­ளது. இது தொடர்பில் நீதி­மன்றம் கவ­னத்தில் கொண்டு ஆராய வேண்டும். இவர்­க­ளுக்கு இப்­படி வரப்­பி­ர­சாதம் கிடைக்கும் நிலையில், தமது பிள்­ளை­களை பறி­கொ­டுத்த தாய்மார் இருவர் நீதிக்­காக ஏங்­கிய நிலை­யி­லேயே இது­வரை உயி­ரி­ழந்­துள்­ளனர். 

ஏற்­க­னவே ஒரு தாய் மர­ண­ம­டைந்த நிலையில் கடந்­த­வாரம் தனது இரு பிள்­ளைகள் விட­யத்தில் நீதி கிடைக்கும் என ஒவ்­வொரு முறையும் நீதி­மன்ற படி­யேறி, நீதிக்­காக காத்துக் கிடந்த மேரி வசந்தா பீரிஸ் அல்­லது யசோ­தரா எனும் தாய் உயி­ரி­ழந்­துள்ளார். 

இவ்­வாறு தாய்மார் உயிரி­ழக்கும் போது அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய நீதி தொடர்ந்து தாம­த­ம­டைந்­து­கொண்டே செல்­கி­றது. என தெரி­வித்தார். இதன்­போது அதற்கு பதி­ல­ளித்த நீதிவான் லங்கா ஜய­ரத்ன, தற்­போது விசா­ர­ணைகள் சரி­யாக இடம்­பெ­று­கின்­றன. 

ஹெட்டி ஆராச்­சியை கைது செய்­யாது இந்த வழக்கை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்­து­வது கடி­ன­மா­ன­தாகும். இயன்­ற­வரை சீக்­கிரம் நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­கவே நான் முயற்­சிக்­கின்றேன். 

அந்த தாய்மார் இறப்­ப­தற்கு தமது பிள்­ளைகள் தொடர்­பி­லான நீதியைக்கோ ரும் ஏக்கம் பிர­தான கார­ண­மாக இருக்­கலாம். நான் அது தொடர்பில் ஆழ்ந்த கவ­லை­ய­டை­கின்றேன். என கலங்கிய கண்களுடன் அறிவித்தார்.

ஏற்கனவே கடத்தப்பட்ட 11 பேரில் உள்ளடங்கும் திலகேஸ்வரனின் தாய் உயி ரிழந்திருந்த நிலையில் கடந்தவாரம் கடத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள அமலன் லியோன், ரொஷான் லியோன் ஆகியோரின் தாயான யசோதரா உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.