அரச துரோகத்திற்கு பக்கபலமாக கூட்டமைப்பின் செயல் – திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார் !
அரசாங்கம் மேற்கொண்டு வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்ட மைப்பும் இணைந்து செயற்படுவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இக் குற்றச்சாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளார். மேலும் தொடர்ந்த கருத்துச் செவ்வியில் திஸ்ஸ விதாரண, அரசாங்கம் மேற்கொ ண்டுள்ள அநீதிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன துணையாகியுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
எமது பொருளாதாரத்தை வெளிநாடுகள் கையில் எடுப்பதற்கும், சுதந்திரத்தை சீர்குலைப்பதற்கும் அவர்கள் துணை போகிறார்கள். எதிர்க்கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் துணை நிற்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறானதொரு எதிர்கட்சி வேறொரு நாட்டிலும் இல்லை. நாட்டு மக்க ளுக்கு இவ் அரசு இன்றைய நிலையில் வேண்டாமெனவும் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தபோது சிங்களம், தமிழ் இரண்டும் அரச மொழிகளாக இருக்க வேண்டுமென்று குரல் வழங்கியது எமது கட்சி.
இலங்கையில் யுத்த மீறல்கள் நடைபெற்றிருந்தால் எமது நாட்டுக்குள் எமது நீதிமன்றமே நேரடியாக ஆராய்ந்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை கொடுப்பது சர்வதேச நீதி !
இச் செயற்பாட்டை முன்னெடுக்காமல் ஐ.நாவிற்குச் சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு வந்திருக்கிறார்கள்.
எம்மை நோக்கி குறிப்பாக அமெ ரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன கை நீட்டி இடம் கொடுத்தது அரசு இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் துணை நிற்பதாக குற்றம் சுமத்தி யுள்ளார்.