Breaking News

இடைக்­கால அறிக்­கை­யில் விவா­தமானால் நாடா­ளு­மன்­றம் போர்க்­க­ள­மா­ம்– மஹிந்த அணி

புதிய அர­ச­மைப்­புக்­கான இடைக்­கால அறிக்­கை­மீது விவா­தம் நடை­பெ­று­மா­னால் நாடா­ளு­மன்­றம் போர்க்­க­ள­மா­குமென மகிந்த அணி அறிக்கை. 

மகிந்த அணி­யின் நாடா­ளு­மன்ற உறு ப்­பி­ன­ரும், ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணி­யின் தலை­வ­ரு­மான வாசு­தேவ நாண­யக்­கார கொழும்­பில் நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­படி எச்­ச­ரித்துள்ளார். 

 மேலும் தெரிவிக்கையில்..

புதிய அர­ச­மைப்­பைக் கொண்­டு­வ­ரு­வ­தற்­குப் பதி­லாகத் தற்­போ­தைய அர­ச­மைப்பை மறு­சீ­ர­மைக்­க­லாம். புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­யால் அதி­க­ள­வி­லான நிதியை அரசு வீண­டித்­துள்ளது. 

நாடா­ளு­மன்­றத்­தில் மூன்று நாள்­கள் நிதியை வீண­டிக்­கும் செயற்­பாட்­டில் அரசு இறங்­கி­யுள்­ளது. நாங்­கள் விவா­தத்துக்குச் செல்­வோம். ஆனால், அங்கு இடம்­பெ­றும் ஜன­ நா­யக விரோ­தச் செயற்­பா­டு­க­ளால் நாடா­ளு­மன்­றம் போர்க்­க­ள­மா­கும். அதி­லி­ருந்து நாடா­ளு­மன்­றைப் பாது­காத்­து காக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.