Breaking News

தீங்­கி­ழைக்கும் அர­சி­ய­ல­மைப்­பினை அங்­கீ­க­ரித்து கையொப்­ப­மி­டேன்

சபா­நாயகர் கரு ஜய­சூ­ரிய உறுதி 

பௌத்த மதத்தின் முதன்மை ஸ்தானத்­தி ற்கோ அல்­லது நாட்­டிற்கோ தீங்­கி­ழைக்கும் எந்­த­வொரு அர­சி­ய­ல­ மைப்பு யோச­னைக் கும் நான் கையொப்­ப­மிட மாட்டேன் என மா­நா­ய­க்கர்கள் உள்­ளிட்ட அனைத்து மதத்­த­லை­வர்­க­ளுக்கும் உறு­தி­ய­ளிக்­கின்­றேன் என்று சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். 

மீரி­கம பிர­தே­சத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சமய நிகழ்­வொன்றில் கல ந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். 

 அவர் மேலும் தெரி­விக்­கையில், அண்­மைய நாட்­களில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக அதி­க­மாக பேசப்­ப­டு­கின்­றது. பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. அவை அனைத்தும் மக்­களை குழப்­பு­வ­தாக அமைந்­தி­ருக்­கின்­றன. புதிய அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான அர­சி­ய­ல­மைப்பு பேர­வை­யொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. 

அதன் தலை­வ­ராக சபா­நாயகர் என்ற அடிப்­ப­டையில் நான் இருக்­கின்றேன். இது­வ­ரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற அடிப்­ப­டையில் கூட அவ்­வா­றான ஒன்றை நான் கண்ணால் காணக்­கூ­ட­வில்லை. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கின்­ற­போது அது குறித்து அனைத்து தரப்­பி­ன­ரி­டத்­திலும் கருத்­துக்கள் பெறப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. அந்த அடிப்­ப­டையில் நாம் அனை­வ­ரி­டத்­திலும் தமது யோச­னை­களை முன்­வைக்­கு­மாறு கோரினோம். 

இதில் நாட்டை பிளவு படுத்தும் யோசனை வந்­தி­ருக்­கலாம். நாட்டில் ஒரு பகு­தியை கோரும் யோசனை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கலாம். அதற்­காக அவற்றை எல்லாம் அங்­கீ­க­ரிப்­பது என்று பொருள்­ப­டாது. தற்­பொது இடைக்­கால அறிக்­கை­யொன்று வெளியி­டப்­பட்­டுள்­ளது. 

அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்ள விட­யங்கள் தொடர்­பாக அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் கலந்­து­ரை­யா­டல்கள் நடை­பெற்று பாரா­ளு­மன்­றத்தில் விவா­திக்­கப்­ப­ட­வுள்­ளது. இதன்­போது பாரா­ளு­மன்­றத்தில் அங்கம் வகிக்கும் 225 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களின் கருத்­துக்­க­ளும் உள்­வாங்­கப்­படும். 

ஒரு சில உறுப்­பி­னர்கள் அர­சி­ய­ல­மைப்பு பேர­வையில் இருந்து நீங்­கி­யி­ருந்­தாலும் ஏனை­ய­வர்­களின் கருத்­துக்­களை நாம் உள்­வாங்­குவோம். அதன் பின்னர் இறுதி செய்­யப்­பட்டு அர­சி­ய­ல­மைப்பு பேர­வையின் தலைவர் என்ற வகையில் நான் கையொப்­ப­மிட வேண்டும். 

அவ்­வாறு கையொப்­ப­மிடும் பட்­சத்­தி­லேயே அது சட்­ட­மா­கு­வ­தற்­கான அங்­கீ­கா­ரத்­தினை பெற­மு­டியும். ஆகவே மகா­நா­யக்­கர்கள், மற்றும் சம­யத்­த­லை­வர்கள் உள்­ளிட்ட எந்­த­வொரு தரப்­பி­னரும் அச்­ச­ம­டை­ய­வேண்­டி­ய­தில்லை. 

நான் அர­சி­ய­ல­மைப்பு பேரவையின் தலைவர் என்ற வகை­யிலும் சபா­நா­யகர் என்ற அடிப்­ப­டை­யிலும் பௌத்த சம­யத்தின் முதன்மைத் தானத்­திற்கோ அல்லது நாட்டிற்கோ தீங்கு விளைவிக்கின்ற எந்தவொரு விடயமும் அரசிய லமைப்பு யோசனையில் காணப்பட்டால் நிச்சயமாக எனது பதவிக்காலத்தி னுள் கையொப்பமிடப்போவதில்லை என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொ ள்கின்றேன். 

ஆகவே தற்போது வரையில் வரையப்படாத ஒரு அரசியலமைப்பினை மையப்படுத்தி பரப்பப்பட்டு வரும் கருத்துக்களை மையப்படுத்தி வீணாக குழப்பமடையவேண்டிய அவசியமில்லை என்றார்.