Breaking News

‘இலங்­கையில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் 2015

பரி­சுத்த பாப்­ப­ரசர் பிரான்சிஸ் தனது இலங்கை விஜ­யத்தின் நிகழ்­வு­களைக் காண்­பிக்கும் பட­வி­ளக்கப் புத்­த­கத்தை முக­ம­லர்ச்­சி­யுடன் பார்­வை­யி­டு­கின்றார். 

‘இலங்­கையில் பாப்­ப­ரசர் பிரான்சிஸ் 2015’ என்ற மகு­டத்தில் கொழும்பு பேரா யர் அதி­வ­ணக்­கத்­துக்­கு­ரிய கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையின் ஆத­ர­வு­டனும் வழி­காட்­ட­லு­டனும் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் (சிலோன்) (பிறைவேட்) லிமிட்­டெட்­டினால் தொகு த்து பிர­சு­ரிக்­கப்­பட்ட இந்தப் புத்­தகம் நினைவை விட்­ட­க­லாத பாப்­ப­ர­சரின் விஜ­யத்­தையும் இலங்­கையில் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் வர­லாறு பற்­றிய நிகழ்­வு­க­ளையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்­கி­றது. இத்­தா­லியின் தலை­நகர் ரோமில் வத்­திக்கான் நகரில் பரி­சுத்த தந்­தை­யிடம் எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் முகா­மைத்­துவப் பணிப்­பாளர் குமார் நடேசன் அவர்கள் கடந்த 13ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை புத்­த­கத்தின் பிர­தியைக் கைய­ளித்தார். 

இலங்கை விஜ­யத்தின் நிகழ்ச்­சி­களை ஒழுங்­க­மைத்த குழுவின் உறுப்­பி­னர்கள் உட்­பட தூதுக் குழு­வி­னரை வத்­திக்கான் நகரில் அமைந்­துள்ள அப்­போஸ்­த­லிக்க மாளி­கையின் மறை ஆலோ­சனை மண்­ட­பத்தில் பரி­சுத்த பாப்­ப­ரசர் வர­வேற்றார். இலங்கை பல வரு­ட­கால போரின் விளை­வான அவ­லங்­க­ளி­லி­ருந்து விடு­பட்டு நல்­லி­ணக்­கத்தை நாடு­வ­தற்கு பாடுபட்டுக்கொண்டிரு க்கின்ற ஒரு நேரத்தில், தான் மேற்கொண்ட அந்த விஜயத்தை ‘பிரத்தியே கமான பேறு’ என்று பாப்பரசர் வர்ணித்தார்.