Breaking News

இலங்கையில் வானூர்தி தயாரிப்புச் செயற்பாடாம் விமானப்படை!

இலங்­கை­யில் முதல் தட­வை­யாக வான் படை­யி­னர் வானூர்தி தயா­ரிப்புப் பணி­யில் ஈடு­ப­ட­வுள்­ள­தாக விமானப்படைத் தள­பதி எயார் மார்­சல் கபில ஜயம்­பதி தெரி­வித்­துள்ளார். 

கண்டித் தலதா மாளி­கை­யில் நடை­பெற்ற மத வழி­பா­டு­க­ளில் கலந்து கொண்­ட­போதே இவ்வாறு தெரிவி த்துள்ளார். மேலும் வான் ­ப­டை­யி­னூ­டாக வானூர்­தி­களை நிர்­வ­கிக்­கும் செயற்பாடுகளே நடைபெற்று வருகி ன்றன.  

பாது­காப்­புச் செய­ல­ரின் ஆலோ­ச­னைக்கு அமை­வாக வானூர்­தி­களை இங்கு தயா­ரிப்­ப­தற்­குத் தேவை­யான முன்­னெ­டுப்­புக்கள் மேற்­கொள்­ளப்­பட்டுள்ளது டன்  தேவை­யான இடம்,  சூழல்,  உற்­பத்திப் பொறிகள் நிறை­வ­டைந்த பின்­னர் அடுத்த ஆண்டு முதல் வானூர்­தி­கள் உற்­பத்தி நட­வ­டிக்­கை­கள் மேற்கொ ள்ளப்படுமெனத் தெரிவித்துள்ளார்.  

போர்க் காலத்­தில் போர் கார­ண­மாக வானூர்­தி­கள் சேத­ம­டைந்­தா­லும் தற்­பொ­ழுது பற­வை­க­ளி­னால் சேதம் ஏற்­ப­டு­கி­றது. எமது நாட்­டிற்­கு­ரிய பன்­னாட்­டுக் கடற்­ப­ரப்பைப் பாது­காப்­ப­தற்­கும், நாட்­டிற்­குள் சட்­ட­ வி­ரோ­த­மாகப் பொருள்­கள் எடுத்து வரப்­ப­டு­வதைத் தடுக்­க­வும் கடற்­ப­டை­யு­டன் இணைந்து கண்­கா­ணிப்பு மற்­றும் சிறப்புப் பாது­காப்பு முன்­னெ­டுப்­பு­களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

எமது நாட்­டில் வானூர்­தி­களை உற்­பத்தி செய்­யும் அதே­வேளை, நாட்­டிற்கு உகந்த தொழில்­நுட்­பத்­து­டன் கூடிய வானூர்­தி­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கும் வான்­படை திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்..