இடைக்கால அறிக்கைக்கு எதிராக கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டம்
எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொ ள்ளப்படவுள்ள புதிய அரசியலமைப்பு த் தொடர்பான இடைக்கால அறிக்கை க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுக்கவுள்ளதாக கூட்டு எதிரணியி னர் தெரிவித்துள்ளனர். நாட்டை பிளவுபடுத்தும் வகையிலான அம்சங்களை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பு தொடர்பான இடைக்கால அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், பொதுமக்களும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட த்தில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கான சகல ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி காலை 9 மணிக்கு பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்னால் இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆர ம்பமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
பல்வேறு விமர்சனங்களுக்கும் ,சர்ச்சைகளுக்கும் உள்ளாக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை மீதான விவாதம் எதிர்வரும் 30 ஆம் திகதி பாராளுமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளதுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.