Breaking News

நிலை­யான சமா­தானம், தீர்­வுக்கு ஐ.நாவின் பங்­க­ளிப்பு தொடரும்

எதிர்க் கட்சித் தலை­வ­ரிடம் ஐ. நா. அறிக்­கை­யாளர் பப்லோ உறுதி 

இலங்­கையில் நிலை­யான சமா­தா­னத்­தினை ஏற்­ப­டுத்தும் நோக்­கிலும் அர­சியல் தீர்­வினை அடையும் வகை­யிலும் தனதும் ஐ.நாவி­னதும் தொடர்ச்­சி­யான பங்­க­ளிப்பு இருக்கும் என ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரிப் எதிர்க் கட்­சித்­ த­லை­வரும் (௧௦ ஆம் பக்கம் பார்க்க) தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ப­டத்­தெ­ரிவித்துள்ளார். 

இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள உண்மை, நீதி, இழப்­பீடு மற்றும் மீள்­நி­க­ழாமை உத்­த­ர­வா­தங்கள் பற்­றிய ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் பப்லோ டீ கிரீப்­பிற்கும் எதிர்க் கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பில் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான உத்­தி­யோக பூர்வ சந்­திப்பு நேற்று சனிக்­கி­ழமை கொழும்பு தாஜ் சமுத்­திரா ஹோட்­டலில் நடை­பெற்­றது. 

காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர், மற்றும் தமிழ் அர­சியல் கைதிகள் போன்ற விட­யங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னை­களை விசேட நிபு­ணரின் கவ­னத்­திற்கு இரா. சம்­பந்தன் கொண்டு வந்தார். 

இக்­க­லந்­து­ரை­யா­டலில் காணி விடு­விப்பு தொடர்பில் கருத்து தெரி­வித்த இரா. சம்­பந்தன் "எமது மக்கள் தமது காணிகள் தொடர்பில் வெறும் உணர்ச்­சிக்கும் அப்­பா­லான இணைப்­பினை கொண்­டுள்­ளார்கள், இந்த மக்கள் சில பிர­தே­சங்­களில் கடந்த 300 நாட்­க­ளுக்கும் அதி­க­மாக தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி ஆர்ப்­பாட்­டங்­களில் ஈடு­பட்டு வரு­கி­றார்கள் என தெரி­வித்தார். 

மேலும் இவர்கள் மழை­யிலும் வெயி­லி­லு­மாக பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு மத்­தியில் தமது காணிகள் விடு­விக்­கப்­பட வேண்டும் என இந்த போராட்­டங்­களில் மிகவும் தீர்­மா­ன­மாக உள்­ளார்கள். 

மேலும், இந்த விட­ய­மா­னது மக்­களின் உணர்­வு­க­ளோடும் அவர்­க­ளது உரி­மை­க­ளோடும் சம்­பந்­தப்­பட்ட விடயம் என்­ப­தனை அர­சாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும் என வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் உண்­மை­யான புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெனில் இந்த யதார்த்தம் புரிந்­து­கொள்­ளப்­பட வேண்டும் எனவும், எனவே இந்த விட­யங்கள் மேலும் தாம­த­மின்றி முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார். 

காணாமல் ஆக்­கப்­பட்டோர் தொடர்பில் கருத்து தெரி­வித்த தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர், "ஒரு தாய் தனது மகனை படை­யி­ன­ரி­டமோ அல்­லது பொலி­ஸா­ரி­டமோ கைய­ளித்­தி­ருந்தால் அவ­ருக்கு என்ன நடந்­தது என்­ப­தனை அறிந்து கொள்ளும் உரிமை உள்­ளது. 

அந்த உரி­மையை மறுக்க முடி­யாது எனவும் வலி­யு­றுத்­தினார். காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தின் செய­லாக்கம் தொடர்பில் காணப்­படும் தாமதம் குறித்து தமது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­திய அவர் இந்த அலு­வ­லகம் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளிலும் நிறு­வப்­ப­ட­வேண்டும் எனவும் கேட்டுக் கெொண்டார் அர­சியல் கைதிகள் தொடர்பில் பேசிய எதிர்க்­கட்சி தலைவர் அவர்கள், "இவர்கள் களவு செய்த கார­ணத்­தி­னாலோ அல்­லது தமது நன்­மைக்­காக சூறை­யா­டிய கார­ணத்­தி­னாலோ காவலில் இருக்­க­வில்லை.

இந்த ஒவ்­வொ­ரு­வ­ரி­னதும் வழக்­குகள் அர­சியல் பரி­ணா­மத்­தினை கொண்­டுள்­ளது. ஆகவே இவை அந்த அடிப்­ப­டையில் நோக்­கப்­பட்டு முடி­விற்கு கொண்டு வரப்­ப­ட­வேண்டும் எனவும் தெரி­வித்தார். 

மேலும் பயங்­க­ர­வாத தடைச்­சட்­ட­மா­னது மிக கேடா­னதும் இந்­நாட்டு சட்ட புத்­த­கங்­களில் இருந்து நீக்­கப்­பட வேண்­டிய ஒன்றும் என அர­சாங்­க­மா­னது ஒப்­புக்­கொண்­டுள்ள போது, எந்த அடிப்­ப­டையில் அதே சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்ட இவர்­களை தொடர்ந்தும் சிறையில் வைத்­தி­ருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்­பினார். 

இந்த விட­யங்­களில் தவ­றி­ழைக்க முடி­யாது என தெரி­வித்த இரா. சம்­பந்தன் அவ்­வாறு தவ­றி­ழைக்­கின்ற பட்­சத்தில் அது நல்­லி­ணக்க படி­மு­றை­க­ளிலே பாரிய தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்தும் எனவும் வலி­யு­றுத்­தினார். 

மேலும் ஒரு சிலர் நல்­லி­ணக்க மற்றும் அர­சியல் தீர்வு முயற்­சி­களை குழப்­பு­வ­தற்கு தயா­ராக உள்ள நிலையில் இந்த விட­யங்கள் அவர்­க­ளுக்கு சாத­க­மாக இருப்­ப­தனை அனு­ம­திக்க முடி­யாது எனவும் குறிப்­பிட்டார். 

இலங்கை மக்­க­ளுக்கும் சர்­வ­தேச சமூ­கத்­திற்கும் இலங்கை அரசு கொடுத்த வாக்­கு­று­தி­களை அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தனை ஐ.நா.உறுதி செய்­ய­வேண்டும் என விசேட நிபு­ணரை வலி­யு­றுத்­திய இரா. சம்­பந்தன் அவர்கள் இந்த வாக்­கு­று­திகள் இலங்கை நாட்­டி­னதும் அதன் மக்­களின் நன்­மை­யி­னையும் கருத்­திற்­கொண்டு இலங்கை அர­சாங்­கத்­தினால் தன்­னார்­வ­மாக கொடுக்­கப்­பட்­டவை என்­ப­தனை சுட்­டிக்­காட்­டிய அதே­வேளை அவற்­றினை இலங்கை அரசு மதித்து நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் எனவும் இவை வெறுமனே எழுத்துருவில் மாத்திரம் இருக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும் தனது விஜயத்தின் முடிவில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தனது கருத்தினை தெரிவிக்கவுள்ளதாக கூறிய விசேட நிபுணர் இலங்கையில் நிலையான சமாதானத்தினை ஏற்படுத்தும் நோக்கிலும் அரசியல் தீர்வினை அடையும் வகையிலும் தனதும் ஐ.நாவினதும் தொடர்ச்சியான பங்களிப்பு இருக்கும் என்பதனையும் இச்சந்திப்பில் குறிப்பிட்டார் .