காணாமல்போன சிறுமிகள் இருவரும், யுவதியும் சரண்
15 வயது சிறுமியின் காதலன், எம்.பி. ஒருவரின் உறவினர் உள்ளிட்ட நால்வர் கைது
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் காணாமல் போனதாக கூறப்பட்ட கொ லன்னாவை சாலமுல்லவைச் சே ர்ந்த இரு சிறுமிகள் மற்றும் இளம் தாயான யுவதி ஆகியோர் நேற்று வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த நிலையில் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
எனினும் அவர்கள் இவ்வாறு திடீரென காணாமல் போனமைக்கான
காரணம் துல்லியமாக நேற்று மாலை வரை வெளிப்படுத்தப்படாத நிலையில் இரு முக்கிய கோணங்களில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் நேற்று மாலையாகும் போது காணாமல் போன நிலையில் பொலிஸில் சரணடைந்த 19 வயதான இளம் தாய், 15 வயதான சிறுமியின் காதலன், உள்ளிட்டவர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
எனினும் இந்த நால்வரில் ஒருவர் யக்கல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மாமியார் உறவு முறையிலானவர் என பொலிஸ் தலைமையகத்தின் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் மாமியாரின் வீட்டில் 14 வயதான காணாமல் போன சிறுமி வீட்டு வேலைகளுக்காக அமர்த்தப்பட்டமை தொட ர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டதால் யக்கல பொலிஸார் அவரைக் கைது செய்ததாக அந்த உயர் பொலிஸ் அதிகாரி சுட்டிக்காட்டினார்.
சிறுமிகள் மற்றும் யுவதி காணாமல் போனமைக்கான காரணம் தொடர்பில் நேற்று மாலையாகும் போதும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
15 வயதான சிறுமியின் காதல் தொடர்பு, வீட்டு வேலைகளுக்காக சிறுமிகளை அமர்த்தும் சட்டவிரோத நடவடிக்கை என்பன இந்த காணாமல் போனமையின் பின்னனியில் உள்ளதா என பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை (14 ஆம் திகதி) கொலன்னாவை - சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் தாய் மலினி வத்சலா பெரேரா, அவரது சகோதரி முறையிலான 15 வயதுடைய யஷந்தி மதுஷானி பெரேரா மற்றும் அவரகளது வீட்டின் அருகே வசிக்கும் 14 வயதுடைய சரிதா சுவேதா எனும் தமிழ் சிறுமி ஆகியோர் காணாமல் போயிருந்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வந்துவிட்டு, தீபாவளிக்காக சுவேதாவுக்கு ஆடை கொள்வனவு செய்ய செல்வதாக கூறிவிட்டு வெளியேறியிருந்த நிலையிலேயே அவர்கள் மூவரும் இவ்வாறு காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து இவர்கள் மூவரும் காணாமல் போனமை தொடர்பில் கிரேண்ட்பாஸ் மற்றும் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையங்களில் இரு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அது தொடர்பில் மேல்மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் மேற்பார்வையில் மேல் மாகாணத்தின் தெற்கு பகுதிக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் வசந்த விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய நுகேகொட பொலிஸ் பிராந்தியத்தின் பொலிஸ் அத்தியட்சர் பிரசாத் ரணசிங்கவின் ஆலோசனைக்கு அமைவாக வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சஞ்சயவின் கீழ் விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இரு சிறுமிகள் மற்றும் யுவதியான இளம் தாய் காணாமல் போனமை கடந்த சனிக் கிழமை முதல் 4 நாட்கள் தொடர் மர்மமாக இருந்தது. இந் நிலையில் பொலிஸார் நேற்று முன் தினம் புதுக் கடை நீதிவான் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட அனுமதிக்கு அமைய தொலைபேசி இலக்கங்கள் பலவற்றை சோதனை செய்ததன் ஊடாக பல்வேறு தகவல்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.
இதனைவிட பொலிஸாருக்கு கிடைத்த தகவல்கள் ஊடாக ஹொரணை, அனுராதபுரம் பகுதிகளுக்கும் சென்று பொலிஸார் விசாரணைகளை செய்திருந்தனர். இந் நிலையிலேயே பொலிஸ் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக நேற்று முன்தினம் இரவு வெல்லம்பிட்டி பொலி ஸார், காணாமல் போன 15 வயதான யஷந்தி மதுஷானி பெரேராவின் காதலன் என கூறப்படும் இளைஞரை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.
யஷந்தி வசித்த அதே பகுதியை சேர்ந்த குறித்த இளைஞனை பொலிஸார் விசாரணை செய்ய ஆரம்பித்த நிலையில் நேற்று முற்பகல் 19 வயதான இளம் தாயும் அவரது சகோதரியான 15 வயது யஷந்தியும் வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.
இதனையடுத்து பொலிஸார் அவர்கள் இருவரிடமும் தொடர் விசாரணைகளை முன்னெடுத்தனர். இதன்போது அவ்விருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களையே பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
பொலிஸார் அவர்களுடன் சேர்ந்து காணாமல் போன 14 வயதான சரிதா ஸ்வேதா தொடர்பில் விசாரணை செய்துள்ள போது சுவேதா கம்பஹா பகுதியில் வெஹரகொடல்ல எனும் இடத்தில் இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தின் சிறப்புக் குழுவொன்று உடனடியாக கம்பஹா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளது. அந்த நேர த்தில் 14 வயதான சுவேதா, பிறிதொரு பெண்ணுடன் கம்பஹா பொலிஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்துள்ளார்.
சுவேதாவை கம்பஹா சென்ற வெல்லம்பிட்டி பொலிஸ் குழு பொறுப்பேற்று வெல்லம்பிட்டிக்கு அழைத்து வந்துள்ளது.
விசாரணைகளை மேற்பரவை செய்யும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைவாக காணாமல் போய் பின்னர் நேற்று பொலிஸில் சரணடைந்த 19 வயதான இளம் தாயையும் 15 வயதான யஷந்தியின் காதலனையும் முதலில் பொலிஸார் கைது செய்தனர்.
15, 14 வயதுகளை உடைய இரு சிறுமிகளை அவர்களது சட்ட ரீதியிலான பாதுகாப்பில் இருந்து பிரித்த குற்றச்சாட்டுக்காவும் அதற்கு உதவி ஒத்தாசை அளித்தமை தொடர்பிலும் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 14 வயதான சுவேதாவை கம்பஹ அபொலிஸ் நிலையம் அழைத்து வந்த பெண்ணையும் அதே குற்றச்சாட்டில் மேலதிக விசாரணை களுக்காக பொலிஸார் கைது செய்தனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில் 14 வயதான சுவேதா, காணாமல் போனதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவியின் தாய் வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்டமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
அது தொடர்பில் பொலிஸாரின் அவதானம் திரும்பிய நிலையில் பாராளு மன்ற உறுப்பினரின் மாமியாரை யக்கல பொலிஸார் நேற்று மாலை கைது செய்தனர்.