முல்லை கடலில் மூழ்கி மாணவர் உயிரிழப்பு : மற்றுமொருவரை காணவில்லை
முல்லைத்தீவு நகரப்பகுதியில் அமை ந்துள்ள சுற்றுலா கடற்கரை பிரதே சத்தி ல் நீச்சலில் ஈடுபட்ட இரண்டு மாண வர்கள் நேற்று கடலில் மூழ்கிய நிலை யில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள துடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளார்.
தீபாவளி நாளான நேற்று பொழுதை மகிழ்ச்சியாக கழிக்கும் நோக்கில் நண்ப ர்கள் ஏழுபேர் கடலில் குளிப்பதற்காக முல்லைத்தீவு கடற்கரைக்கு சென்று ள்ளனர். இந்த நிலையில் கடலில் குளித்துகொண்டிருந்த சமயம் இரண்டுபேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் இடம்பெற்று நேற்று மாலை இடம்பெற்ற நிலையில் மாலை 6 மணியளவில் காணாமல்போன ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
கடற்படையினர் மற்றும் மீனவர்கள் இணைந்து நேற்று இரவு தேடுதல் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டனர்.
குறித்த சுற்றுலா கடற்கரை பிரதேசத்தில் விடுமுறை நாட்களில் இனிமையாக பொழுதை கழிக்கும் நோக்கோடு ஆயிரக்கணக்கான சுற்றுலா பிரயாணிகள் வந்து செல்லும் நிலையில் முறையான பாதுகாப்பு வசதிகள் எவையும் ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு கடற்பாதுகாப்பு படை வசதிகள் எவையும் இதுவரையில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.