Breaking News

மக்களை குழப்ப வேண்டாம் - ரணில் விசனம்

இல்லாத அரசியலமைப்பு குறித்து பொய்யான கருத்துக்கள்; பிரதமர் ரணில் விசனம் 

இல்­லாத அர­சியலமைப்பு குறித்து பொய்­யான கருத்­துக்­களை பரப்ப வேண்டாம். புதிய அர­சியலமைப்பு உரு­வாக்­கப்­பட்ட பின்னர் உண்­மை­களை தெரிந்­து­கொண்டு விமர்­சிக்க வேண்டும். நாட்டில் பல்­வேறு பிரச்­சி­னை­களை தீர்க்­க­வேண்­டிய நிலையில் மக்களை குழப்ப வேண்டாம் என்று பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க வலியுறுத்தினார்.  கடந்த ஆண்டு ஏற்­பட்ட அனர்த்­தத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்கள் வழங்கும் நிகழ்வு அல­ரி­மா­ளி­கை யில் நேற்று இடம்­பெற்றது. இந்நிகழ்வில் கலந்­து­கொண்டு கருத்து தெரி­வித்த போதே பிரதமர் இவ்வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். நாட்டில் அனர்த்­தங்­களில் பாதிக்கப்­படும் மக்­களை பாது­காக்க விரை­வான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும். நாம் இன்றும் நவீன வச­தி­களை பயன்­ப­டுத்­தாததன் கார­ணமே இழ ப்­பு­க­ளுக்கும் அழி­வு­க­ளுக்கும் அதி­க­ளவில் முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை மை உரு­வா­கி­யுள்­ளது. 

எனினும் அனர்த்­தங்கள் குறித்து மாற்று வேலைத்­திட்­டங்­களை வெகு விரை வில் நாம் முன்­னெ­டுப்போம். மக்­களை பாது­காக்கும் தர­மான வேலைத்­திட்­டங்­களை நாம் சர்­வ­தேச நாடு­க­ளுடன் இணைந்து முன்­னெ­டுப்போம். கடந்த ஆண்டில் அனர்த்­தத்தில் மாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்­கவே நாம் 1.3 மில்­லியன் ரூபாய் ஒதுக்­கி­யுள்ளோம். 

அதன் ஒரு­கட்­ட­மாக இப்­போது தெரி­வு­செய்­யப்­பட்ட குடும்­பங்­க­ளுக்கு நாம் நிதி உத­வி­களை வழங்­கு­கின்றோம். இந்த ஆண்டு இறு­திக்குள் பாதிக்­கப்­பட்ட சகல மக்­க­ளுக்கும் நாம் நிவா­ர­ணங்­களை வழங்கி மக்­களின் நிலை­மை­களை மேம்­ப­டுத்தும் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்போம். 

சர்­வ­தேச நாடு­களின் மூல­மாவோ சர்­வ­தேச வங்­களின் மூல­மா­கவும் நாம் கடன்­க­ளையும், உத­வி­க­ளையும் பெற்று இந்த வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்றோம். சர்­வ­தேச நாடு­களில் இவ்­வா­றான நிலை­மை­களில் எல்லாம் ஊட­கங்கள் அனர்த்­தங்கள் குறித்த வேலைத்­திட்­டங்கள் தொடர்பிலே யே அதி­க­ளவில் முக்­கி­யத்­துவம் கொடுக்கின்றன. 

எனினும் இன்று எமது நாட்டில் அதி­க­ளவில் அர­சியலமைப்பு குறித்து மட்­டுமே அனைத்து ஊட­கங்­களும் பேசுகின்றன. நாம் முன்­னெ­டுக்கும் வேலைத் ­திட்­டங்­களை நாட்­டினை பிள­வு­ப­டுத்த போவ­தாக ஊடகங்கள் கூறுகின்றன. 

மாநா­யக தேரர்­களை குழப்­பத்தில் ஆழ்த்தும் வகை­யிலும் ஊட­கங்கள் கருத்­துக்­களை முன்­வைத்து நாட்டின் நல்­லி­ணக்­கத்தை சிதை­வ­டை­யச்­செய்யும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன. 

உரு­வாக்­கப்­ப­டாத ஒரு அர­சியலமைப்பு குறித்து பொய்­யான கருத்­துக்­களை பரப்ப வேண்டாம். இன்னும் அர­சியல் அமைப்பின் ஆரம்ப நட­வ­டிக்­கை­யேனும் முன்­னெ­டுக்­காத நிலையில் இல்­லாத அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்­கப்­பட்­ட­தா­கவும் அது மோச­மான ஒன்­றா­கவும் விமர்­சிக்கப்பட்டு வரு­கின்­றது. 

இப்­போது அர­சியலமைப்பு குறித்து கருத்­துக்கள் முன்­வைக்க வேண்­டிய அவ­சியம் இல்லை. பார­ளு­மன்­றத்தில் அர­சியலமைப்பு சபை உரு­வாக்­கப்­பட்டு இந்த விட­யங்கள் ஆரா­யப்­பட்டு வரு­கின்­றன. 

நாட்­டிற்கு பொருத்­த­மான, பொரு­ளா­த­ரத்தை கட்­டி­யெ­ழுப்­பக்­கூ­டிய, ஐக்­கிய இலங்­கைக்குள் தீர்­வு­களை பெற்­று­கொள்­ளக்­கூ­டிய வகை­யி­லான அர­சியல மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வது குறித்தே இன்றும் நாம் பாரா­ளு­மன்­றத்தில் கலந்­தா­லோ­சித்து அதில் உள்ள முரண்­பா­டு­களை ஆராய்ந்து தீர்­மானம் எடுத்து வரு­கின்றோம். 

புதிய அர­சியலமைப்பு குறித்து தத்­த­மது கட்­சி­களின் கருத்­துக்­களை முன்­வைத்து விவாதம் செய்­யவும் நாம் சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும் வாய்ப்­பு­களை வழங்­கி­யுள்ளோம். இதனை சரி­யான வாய்ப்­பாக பயன்­ப­டுத்தி கட்­சி­களும் தமது நிலைப்­பா­டு­களை முன்­வைக்க வேண்டும். 

நாம் அர­சியலமைப்­பினை உரு­வாக்கும் போது அது குறித்த சரி­யான தெளி­வினை பெற்­றுக்­கொண்டு அதன் பின்னர் அர­சியலமைப்பு குறித்து விமர்­ச­னங்­களை முன் வைக்க வேண்டும். 

அதற்­கான காலம் இது­வல்ல. சக­லரும் தமது நிலைப்­பா­டு­களை, கார­ணி­களை, ஆலோ­ச­னை­களை, பிரே­ர­ணை­களை முன்­வைக்க சரி­யான காலம் கிடை க்கும், அனை­வ­ரதும் இணக்­கத்தில் பொது­வான ஒரு அர­சியலமைப்பு உரு­வாக்க முடியும். 

 நாம் அர­சியலமைப்பு குறித்த நிலை­பாட்­டினை முன்­வைத்த பின்னர் அதில் முரண்­பா­டுகள் இருக்­கு­மாயின் அவற்றை வைத்­து­கொண்டு எம்­மீ­தான விமர்­ச­னங்­களை முன்­வை­யுங்கள். ஆனால் உரு­வாக்­கப்­ப­டாத ஒரு விடயம் குறி த்து பொய்­யான தக­வல்­களின் பிர­காரம் இவ்­வாறு அரசாங்கத்தை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம். 

மக்களை ஒன்றிணைக்கவும் நாட்டினை கட்டியெழுப்பவும் பல வேலைத்திட்ட ங்களை நாம் முன்னெடுக்க வேண்டும். நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 

மக்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அவற்றினை சரிசெய்ய வேண்டும். அவ்வாறு இருக்கையில் தேவையற்ற கருத்துக்களை முன்வை த்து மக்களை குழப்பும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.