Breaking News

சமஷ்­டியை வழங்­கினால் வடக்கில் என்ன நடக்கும்? : கறுப்­பு­பட்டி போராட்டம் சிறந்த ஒத்­திகை என்­கிறார் கெஹ­லிய

சமஷ்டி முறை­மையில் நாட்டின் தேசிய பிரச்­சி­னைக்கு தீர்­வு கண் டால் என்ன நடக்கும் என்­ப­தற்­கான ஒரு ஒத்­தி­கை­யையே நாம் கடந்த சனிக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் கண்டோம். 

வடக்கு முத­லமைச்­ச­ருக்கு பொலிஸ் அதி­காரம் இருந்­தி­ருந்தால் அன்று என்ன நடந்­தி­ருக்கும் என்­பதை எம்மா ல் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது என்று கூட்டு எதி­ர­ணியின் முக்­கி­யஸ்தர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கெஹெ­லி ய ரம்­புக்­வெல்ல தெரி­வித்தார். 

 அத்­துடன் ஒரு­மித்த நாடு என்­பது சமஷ்­டிக்கு ஒப்­பா­ன­தாகும். எனவே இதனை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அர­சி­ய­ல­மைப்பை தயா­ரித்து சர்­வ­ஜ­ன­வாக்­கெ­டுப்­புக்கு விடு­வது அபா­ய­க­ர­மா­ன­தாகும். இது வெற்­றி­ய­டைந்­தாலும் தோல்­வி­ய­டைந்­தாலும் அது நாட்டின் ஒற்­று­மை க்கு பாத­க­மாக அமையும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

கடந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­ப­தியின் யாழ். விஜ­யத்­திற்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்டம் மற்றும் ஒரு­மித்த நாடு என்ற முறைமை என்­பன தொட ர்பில் விப­ரிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

கெஹெ­லி­ய­ரம்­புக்­வெல்ல இந்த விடயம் குறித்து மேலும் கூறு­கையில்; கட ந்த சனிக்­கி­ழமை ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு சென்­ற­போது அவ­ருக்கு எதி­ராக கறுப்­புக்­கொடி ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

இந்த ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்ட சம்­ப­வ­மா­னது எமக்கு பல்­வேறு செய்­தி­களை வலி­யு­றுத்­து­வ­தாக அமைந்­தி­ருக்­கி­றது. 

அதா­வது பொலிஸ் அதி­காரம் இல்­லா­ம­லேயே வடக்கு மாகாண அர­சி­யல்­வா­திகள் இவ்­வாறு நடந்­து­கொள்­வதை எம்மால் அவ­தா­னிக்க முடிந்­தது. 

இந்­நி­லையில் மாகா­ண­ச­பை­க­ளுக்கு பொலிஸ் அதி­காரம் வழங்­கப்­பட்டால் என்ன நடக்கும் என்­பதை எம்மால் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது. 

வடக்கு முத­ல­மைச்­ச­ருக்கு பொலிஸ் அதி­காரம் இருந்­தி­ருந்தால் கடந்த சனிக்­கி­ழமை என்ன நடந்­தி­ருக்கும் என்­ப­தனை நாம் நினைத்துப் பார்க்­க­வேண்டும். 

ஒரு­வேளை ஜனா­தி­ப­திக்கு வட­மா­கா­ணத்­திற்கு செல்ல முடி­யாத நிலை­மை­கூட ஏற்­பட்­டி­ருக்­கலாம். இத­னால்தான் பொலிஸ் மற்றும் காணி அதி­கா­ரங்கள் மாகா­ண­ச­பை­க­ளுக்கு வழங்­கப்­பட முடி­யா­தவை என நாங்கள் கூறி­வ­ரு­கின்றோம். 

மேலும் ஒரு­மித்த நாடு என்ற விட­யத்தைக் கூறி அர­சாங்கம் நாட்டு மக்­களை ஏமாற்­று­கி­றது. ஒற்­றை­யாட்சி எனும் பொழுது அந்த நாடு தொடர்­பான முழு­மை­யான சட்­டங்­களும் மத்­திய அர­சாங்­கத்­தினால் நிறை­வேற்­றப்­படும். 

ஆனால் ஒரு­மித்த நாடு அல்­லது ஒற்­றை­யாட்சி தவிர்ந்த ஏனைய முறை­மைகள் வரும்­போது மாநி­லங்கள் சட்­டங்­களை நிறை­வேற்றி மத்­திய அர­சாங்­கத்­திற்கு அறி­விக்கும் நிலைமை ஏற்­ப­டலாம். 

அதனால் தான் நாங்கள் ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லேயே நாடு நீடிக்­க­வேண்டும் என வலி­யு­றுத்­து­கிறோம். ஒரு­மித்த நாடு என்­பது அல­கு­களின் கூட்­டி­ணைவை குறிக்­கின்­றது. எனவே இது ஒற்­றை­யாட்­சி­யா­காது. 

இதனை வைத்து மக்­களை ஏமாற்ற அர­சாங்கம் முற்­ப­டக்­கூ­டாது. இதே­வேளை இவ்­வாறு ஒரு­மித்த நாடு என்ற அடிப்­ப­டையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தயா­ரிக்­கப்­பட்டு சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிற்கு விட­யப்­பட்டால் நிச்­சயம் அது மக்­களால் தோற்­க­டிக்­கப்­படும். 

ஆனால் இந்த சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பில் வெற்றி ஏற்­பட்­டாலும் தோல்வி ஏற்­பட்­டாலும் அது கூட்­ட­மைப்­பிற்கு வெற்­றி­யா­கவே அமையும். காரணம் இதில் வெற்­றி­பெற்றால் கூட்­ட­மைப்பு எதிர்­பார்த்த ஆட்சி முறைமை நாட்டில் இடம்­பெறும். 

ஒரு­வேளை சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு தோல்வி ஏற்­பட்டால் அதனை வைத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பையில் ஒரு பிரே­ர­ணையை முன்­வைக்கும். 

அதா­வது 70 வரு­ட­கா­ல­மாக நாங்கள் அர­சியல் அதி­கா­ரத்­திற்­காக போராடி வரு­கின்றோம் ஆனால் கிடைக்­க­வில்லை தற்­போது குறைந்­த­பட்ச அதிகாரமுறை யும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 

எனினும் வடக்கு, கிழக்கில் 95 வீதமான மக்கள் இதனை ஆதரித்துள்ளனர். எனவே எமக்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தாருங்கள் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கோரிக்கையை முன்வைக்கும் நிலைமை காணப்படுகின்றது. 

இது நாட்டுக்கு பாரிய பாதகத்தை ஏற்படுத்தும். எனவே இதனை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவதும் அபாயகரமானதுதான் என்றார்.