புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைவில்
புதிய அரசியலமைப்பு தொடர்பாக வழி நடத்தும் குழுவின் இடைக்கால வரைவில் புதிய சொற்கள் உள்வாங்கப் பட்டுள்ளமை சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.
மேலும் இடைக்கால வரைவு குறித்த தேவையான யோசனைகளையும் பரிந்துரைகளையும் இவ்வாரத்தில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் அரசாங்கத்திற்கு அறிவிக்கும் என அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெத கம தம்மானந்த தேரர் குறிப்பிட்டார்.
சமஷ்டி முறைமைக்கு
நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் மற்றும் சொற்கள் புகுத்தப்பட்டுள்ளதாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்த வேண்டும்.
புதிய அரசியலமைப்பு விவகாரம் நாட்டில் அரசியல் குழப்பத்துக்குக் காரணமாகி விடக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக மெதகம தம்மானந்த தேரர் மேலும் கூறுகையில்,
புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை தொடர்பில் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்கள் ஆராய்ந்து வருகின்றன.
ஒற்றையாட்சிக்கும் தேசிய பாதுகாப்பு மற்றும் பௌத்த மததத்திற்கான சிறப்புரிமைகளுக்கும் இதுவரையில் காணப்பட்ட அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படக் கூடாது.
ஆனால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தல் குழு தற்போது முன்வைத்துள்ள இடைக்கால அறிக்கையில் சொற்களில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
நாட்டிற்கு புதிய அரசியலமைப்பு ஒன்று தேவைப்படும் போது அதனை அனைத்து தரப்புகளின் அனுமதியுடன் கொண்டு வர வேண்டும். அதில் எவ்விதமான தவறும் இல்லை.
ஆனால் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டிய விடயங்களில் பல்வேறு வகையில் அர்த்தங்களைத் தரக்கூடிய சொற்களைப் பயன்படுத்தி அரசாங்கம் குழப்பத்தை உருவாக்கவோ அல்லது நம்பிக்கையை இழந்து விடவோ கூடாது.
வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எமக்கு வழங்கப்பட்டுள்ளது. அவற்றை கவனத்தில் கொண்ட போது பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் மற்றும் ஒற்றையாட்சி முறைமை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களுக்கு சவால் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு அர்த்தங்களை தரக்கூடிய சொற்கள் புகுத்தப்பட்டுள்ளன.
மேலும் பல்வேறு நிபுணர்களைக் கொண்டு புதிய அரசியலமைப்பு தொடர்பான வழி நடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையை ஆராய்ந்து வருகின்றோம். பெரும்பாலும் இந்த வார இறுதியில் எமது நிலைப்பாட்டை அரசாங்கத்திற்கு அறிவிக்க உள்ளோம்.
மற்றுமொரு முக்கிய விடயம் யாதெனில் சமஷ்டி முறைமைக்கு நாட்டை நகர்த்தக் கூடிய வகையில் பல்வேறு விடயங்கள் புகுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன.
ஆனால் இடைக்கால அறிக்கையில் சமஷ்டி பரிந்துரையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிய அரசியலமைப்பு விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அனைவரினதும் கடமையாகும்.
ஜனாதிபதிக்கு தெரியாது பல்வேறு விடயங்கள் இடைக்கால அறிக்கையில் காணப்படுமாயின் அரசாங்கம் தொடர்பிலான மக்களின் நம்பகத் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பான பணிகளை வேறு யாராவது செய்வதும் அது குறித்த தகவல்களை தொலை பேசியில் அறிவதுமாக நாட்டின் தலை வரின் நடவடிக்கைகள் காணப்பட்டால் அநாவசியமான சந்தேகங்களே உருவா கும் என்றார் .