இரட்டை இலை சின்னம் யாருக்கு என - இறுதி விசாரணை டெல்லியில் !
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என முடிவு செய்ய தேர்தல் ஆணை யகத்தின் இறுதி விசாரணை டெல்லி யில் இன்று நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், டி.டி.வி.தினகரன் அணியினரும் பங்கேற்பார்கள்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியா கவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது.
சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந் நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் தெரிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டுள்ளன.
இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்ன த்தையும் தேர்தல் ஆணையகம்
முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டி யில் உள்ளன.
மேலும் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, இடைத்தேர்தல் ரத்தாகியுள்ளது. பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின.
லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷ னில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் ஆணையகம் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயற்படு கின்றனர்.
இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு?
என்பதை நவம்பர் 10-ந் திகதிக்குள் தேர்தல் ஆணையகம் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொட ர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளி டமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை முன்னெ டுத்தனர்.
அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிக ளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒது க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 16-ந் திகதி 2-வது கட்ட விசாரணை இடம்பெற்றது.
அன்று பிற் பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்.
அதன்பின்னர், இறுதி விசாரணையை 23-ந் திகதிக்கு (அதாவது இன்று) ஒத்தி வைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று (திங்கட் கிழமை) இடம்பெறுகின்றது.
விசாரணைக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு இரு அணியின ருக்கும் தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனு சாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளி ட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
இதேபோல், டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில், அவரது ஆதரவு எம்.பி.க்க ளும், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே, இன்று இடம்பெறும் இறுதி விசாரணைக்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவாகுமென தேர்தல் ஆணையக வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.
என்பதை நவம்பர் 10-ந் திகதிக்குள் தேர்தல் ஆணையகம் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதைத் தொட ர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளி டமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை முன்னெ டுத்தனர்.
அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிக ளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒது க்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதன்பிறகு கடந்த 16-ந் திகதி 2-வது கட்ட விசாரணை இடம்பெற்றது.
அன்று பிற் பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்துள்ளனர்.
அதன்பின்னர், இறுதி விசாரணையை 23-ந் திகதிக்கு (அதாவது இன்று) ஒத்தி வைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி, இரட்டை இலை சின்னம் தொடர்பான இறுதி விசாரணை இன்று (திங்கட் கிழமை) இடம்பெறுகின்றது.
விசாரணைக்காக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகுமாறு இரு அணியின ருக்கும் தேர்தல் ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. விசாரணையில் கலந்து கொள்வதற்காக எடப்பாடி பழனிசாமியின் அணியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஜெயக்குமார், மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனு சாமி, நத்தம் விஸ்வநாதன், முன்னாள் எம்.பி. மனோஜ்பாண்டியன் உள்ளி ட்டோர் டெல்லி சென்றுள்ளனர்.
இதேபோல், டி.டி.வி.தினகரன் அணியின் சார்பில், அவரது ஆதரவு எம்.பி.க்க ளும், தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
எனவே, இன்று இடம்பெறும் இறுதி விசாரணைக்கு பிறகே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து முடிவாகுமென தேர்தல் ஆணையக வட்டா ரங்கள் தெரிவித்துள்ளன.