Breaking News

அரசியலமைப்பு முயற்சியை உடனடியாக கைவிடுங்கள்

அஸ்கிரிய, மல்வத்த பீடங்கள் கூட்டாக அரசாங்கத்திற்கு அறிவிப்பு 

இலங்­கைக்கு புதிய அர­சி­ய­ல­மைப்புத் தேவை­யில்லை.இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்பே போது­மா­னது. எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்க முன்­னெ­டுக்கும் முயற்­சி­களை உட­ன­டி­யாக அர­சாங்கம் நிறுத்த வேண்டும் என்று அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்கள் அறி­வித்­தி­ருக்­கின்­றன. 

தற்­போது முன்­னெ­டுக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்­பி­னூ­டாக நாட்டில் பிளவு ஏற்­படும் அபாயம் இருக்­கின்­றது. எனவே அர­சாங்கம் இந்த செயற்­பாட்டை உட­ன­டி­யாக நிறுத்த வேண் டும். அத்­துடன் நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தக் கூடாது என்றும் மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்கள் அறி­வித்­தி­ருக்­கின்­றன. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு மற்றும் முன்­வைக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால அறிக்கை தொடர்பில் ஆராய்­வ­தற்­காக நேற்­று­கூ­டிய அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்­களின் நிர்­வாகக் குழுக்கள் இந்த முடிவை எடுத்­துள்­ள­துடன் அர­சாங்­கத்­திடம் கோரிக்­கை­யையும் விடுத்­தி­ருக்­கின்­றன. 

கண்டி தல­தா­மா­ளி­கையில் நேற்று கூடிய இந்த அஸ்­கி­ரிய மற்றும் மல்­வத்து பீடங்­களின் நிர்­வாகக் குழு பிர­தி­நி­திகள் புதிய அர­சி­ய­ல­மைப்பு முயற்­சிகள் மற்றும் இடைக்­கால அறிக்கை தொடர்­பாக விரி­வாக ஆராய்ந்­தி­ருக்­கின்­றன. 

இதன்­போதே அர­சாங்கம் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­க­வேண்டும் என்ற முயற்­சியை கைவிட வேண்டும் என்ற முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த கூட்­டத்தின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெ ளியிட்ட மல்­வத்து மற்றும் அஸ்­கி­ரிய பீடங்­களின் பிர­தி­நி­திகள் இந்த அறி­விப்பை வெளி­யிட்­டனர். 

மல்­வத்து பீடத்தின் மல்­வத்து பீடத்தின் தேரர் விம­ல­தர்ம தேரர் இது தொடர்பில் குறிப்­பி­டு­கையில், நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சி­ய­மில்லை. எமக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு தேவை­யில்லை. இருக்­கின்ற அர­சி­ய­ல­மைப்போ போது­மா­னது. 

அர­சாங்­கத்தின் இந்த அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் முயற்­சியே முழு இலங்­கை­யி­னதும் தேரர்கள் எதிர்க்­கின்­றனர். அர­சாங்­கத்­திற்கு எமது எதிர்ப்பை நாங்கள் வெ ளியி­டு­கின்றோம். 

உட­ன­டி­யாக இந்த செயற்­பா­டு­களை நிறுத்­துங்கள். தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பின் மூலம் மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் இருக்­கின்­றன. எனவே அது போது­மா­னது இது மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரத்தை பகிர்ந்து கொடுக்க செய்யும் ஒர தந்­திர நட­வ­டிக்­கை­யாகும். 

இதன் மூலம் நாட்­டுக்க எந்த பலனும் இல்லை. முன்னாள் ஜனா­தி­பதி ஜெ.ஆர். ஜெய­வர்­தன மேற்­கொண்ட செயற்­பாட்­டினால் எமது நாடு மிகவும் மோச­மான நிலைக்கு சென்­றுள்­ளது. 

மேலும் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களும் அவ்­வாறே இருக்க வேண்டும் என்றார். அஸ்­கி­ரிய பீடத்தின் பிர­தி­நிதி மெத­கம தம்­மா­னந்த தேரர் குறிப்­பி­டு­கையில், புதிய அர­சி­ய­ல­மைப்போ அல்­லது அர­சியல் திருத்­தமோ தற்­போது முன்­வைக்­கப்­டப வேண்­டிய அவ­சியம் இல்லை. 

அது நாட்டு மக்கள் மத்­தியில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்தும். தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற பேச்­சு­வார்த்­தை­களே எம் மத்­தியில் பிள­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புதிய ஏற்பாடுகள் மூலம் நாட்டுக்கு பாதகம் ஏற்படும். நாடு பல பிரிவுகளாக பிரியும். 

எனவே தற்போது இருக்கின்ற அரசியலமைப்பு போதுமானது அதனையே தொடர்ந்து பேணுவோம். புதிய அரசியலமைப்பு தேவைப்பட்டால் அதனை புதிய பிரவேசத்தில் செய்யலாம். அதுவரை தற்போது முன்னெடுக்கப்படும் பணிகளை நிறுத்திவிடுங்கள் என்றார்.