Breaking News

மாணவி வித்தியாவின் வீட்டுக்கு ஜனாதிபதி விஜயம் - உதவி வழங்குவதாக வாக்குறுதி !

யாழ்ப்பாணம், புங்குடுதீவில் பாலி யல் துஷ்பிரயோகத்தினால் படுகொ லையான மாணவி வித்தியாவின் வீட்டுக்குச்சென்று தாயாரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. நேற்றைய தினம் முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் நடை பெற்ற வவுனியா மாவட்ட ‘உத்தி யோகபூர்வ பணி’ ஜனாதிபதி சேவை நிகழ்ச்சித்திட்டத்தின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி வவுனியா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் குடும்பத்தின் சுகதுக்கங்களை அறிந்துகொள்வதற்காக அவரது வீட்டு க்கு வருகை தருவதாக ஜனாதிபதி மாணவி வித்தியாவின் தாயாருக்கு வழ ங்கிய உறுதிமொழிக்கேற்ப நிகழ்ச்சியின் முடிவில் வவுனியா பிரதேசத்தில் உள்ள அவர்களின் வீட்டுக்குச் சென்ற ஜனாதிபதி, குடும்ப உறுப்பினர்களின் சுகதுக்கங்களை கேட்டறிதுள்ளார். 

மாணவி வித்தியாவின் மூத்த சகோதரியின் உயர் கல்விக்காகவும்  அவரது குடும்பத்தின் எதிர்கால செயற்பாடுகளிற்காகவும் முடிந்த உதவிகளை வழங்கு வதாக ஜனாதிபதி  வாக்குறிதியளித்துள்ளார். 

மாணவி வித்தியாவின் கொலைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை துரி தப்படுத்தியதற்காக ஜனாதிபதி வழங்கிய உதவி குறித்து அவரின் தாயார் ஜனாதிபதிக்கு நன்றி கூறியுள்ளார்.