Breaking News

ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் விவகாரம்: தெஹிவளை பகுதியிலேயே ஐந்து பேரை கடத்தினோம்

முதலாம், இரண்டாம் சந்தேக நபர்களின் கீழ் சேவையாற்றிய மூவர்

தெஹிவளை பகுதியில் வைத்தே கடந்த 2008.09.17 அன்று ஐந்து பேரை தாம் உள்ளிட்டோரே கடத்தியதாக வும், லெப்டினன்ட் கொமாண்டர் ஹெ ட்டி ஆராச்சியின் தலைமையி லேயே அந்த நடவடிக்கை இடம்பெற்றதா கவும் கடற்படை வீரர்கள் இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு கடத்தப்பட்டோரை கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப் போது இருந்த லெப்டி னன்ட் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமாண்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்கவிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் அவ்வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர். 

இதனைவிட கடத்தப்பட்ட பலர் குறித்த கன்சைட் இரகசிய வதை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பிலும் மற்றொரு கடற்படை வீரர் சி.ஐ.டி. விசேட விசாரணையாளர் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா தலைமையிலான அகுழுவினரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளனர். 

இது தொடர்பில் பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா நேற்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்து அறிக்கை சமர்பித்தார். இதனைவிட விசாரணைக்கு தேவையான பல இரகசிய ஆவணங்களுட்டவற்றை கடற்படை தொடர்ந்து குற்றப் புலனயவுப் பிரிவுக்கு வழங்க மறுத்துவருவதாக விசாரணை அதிகாரி நிசாந்த சில்வா சுட்டிக்காட்டியதையடுத்து, குற்றவியல் சட்டத்தின் 124 ஆவது அத்தியாயத்துக்கு அமைவாக அந்த அத்தனை ஆவணங்களையும் சி.ஐ.டி. யிடம் ஒப்படைக்க நீதிவான் லங்கா ஜயரத்ன கடற்படை தளபதிக்கு கட்ட ளையிட்டார். 

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வைத்து 2008 ஆம் ஆண்டு 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்க அஜயரத்ன முன்னிலையில் மீளவும் விசாரணைக்கு வந்தது. 

இதன்போதே விசாரணை அதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிசாந்த சில்வா வின் கோரிக்கையை ஏற்று இந்த கட்டளை பிறப்பிக்கப்பட்டது. 

அத்துடன் இந்த விவகாரத்தில் தற்போது கைது செய்யப்படுவதற்காக தேட ப்பட்டு வரும் கடற்படையின் லெப்டினன்ட் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி யைக் கைது செய்ய பகிரங்க பிடியாணையும் நீதிமன்றில் நேற்று பிறப்பி க்கப்பட்டது. 

முன்னாள் கடற்­படை தள­பதி, வசந்த கரண்­ணா­கொட தனது பாது­க­ப்பு உத்­தி­யோ­கத்­த­ராக இருந்த லெப்­டினன்ட் கொமாண்டர் சம்பத் முன­சிங்­க­வுக்கு எதி­ராக கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த மேல­திக விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த கடத்தல் விவ­காரம் அம்­ப­லத்­துக்கு வந்­ததிருந்தது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் உத்­தர­வுக்கு அமை­வாக குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் 

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சானி அபேசேகரவின் நேரடி கட்டுப்பாட்டில் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­களில் இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன. 

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர். 

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா கஜன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.