உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடவுள்ள சரத் பொன்சேகா – கோட்டாபய
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்த லில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வும், முன்னாள் பாதுகாப்புச் செயலா ளர் கோட்டாபய ராஜபக்சவும் நேரு க்கு நேர் சமரிடுவார்கள் என்ப தோடு இதற்கமைய வடமத்திய மாகாண சபைக்கான தேர்தலில் இவ்விருவ ரும் களமிறங்கவுள்ளதாக அரச உய ர்மட்டச் செய்திகள் தெரிவி க்கின்றன.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் திருத்தம் உள்ளடங்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலம் எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வழங்க ப்படவுள்ளது. இச்சட்ட மூலம் சபையில் முன்வைக்கப்பட்ட பின்னரே உள்ளூ ராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கான திகதியும் தெரிவிக்கப்படும்.
இந் நிலை யில் வடமத்திய மாகாண சபை முதலமைச்சர் பதவிக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் பெயர் விரிவு ரைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனா்.
இவ்வேளை, ஒன்றிணைந்த எதிர்கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செய லாளர் கோட்டாபய ராஜபக்சவும் சரத் பொன்சேகாவுக்கு மோதல் களமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.