Breaking News

தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் - நல்லூர் வீதியில் இன்று

ஈழ மண்ணின் விடிவிற்காக தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் தன்னுயி ரை உருக்கி ஈகம் செய்த தியாகி லெப் கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு மெழுகுவர்த்தி சுடர் விட ஆரம்பித்து ள்ளது. நல்லூர் தெற்கு வீதியில் அவ ரது நினைவுத் தூபி அமைந்திருந்த இடத்தில் இன்று காலை 10.10 மணி க்கு நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பி த்து வைக்கப்பட்டு முதல் நிகழ்வாக கடந்த 23 ஆண்டுகளாக அரசியல் கைதியாக சிறையில் வாடும் பார்த்தீபனின் அன்னையால் தியாக தீபத்திற்கு ஈகச் சுடரேற்றப்பட்டு அகவணக்கத்துடன்  ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

தியாக தீபத்தின் திருவுருவப் படத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் ஆகியோர் மலர் மாலையைச் சூடியுள்ளனர்.

அதனை அடுத்து பொது மக்கள் கட்சி அங்கத்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்த நினைவுரைகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் நடாத்தியுள்ளனர்.