Breaking News

ஐரோப்பிய ஒன்றியம் காணாமல் போனோர் தொடர்பாக - சிறிலங்கா அரசிடம் !

யுத்தத்தின் கடைசியில் காணாமலா க்கப்பட்டோருக்கு என்ன நடந்தது ? எங்கே அவர்கள் என்ற விடயத்தை சிறிலங்கா அரசாங்கம் தெரியப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. 

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்கா வுக்கான தூதுவர் துங்- லாய் மார்கே தலைமையிலான, ஐரோப்பிய ஒன்றி யத்தின் உண்மை கண்டறியும் குழு சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவை நேற்று பிற்பகல் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்குறிப்பிட்ட வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பிரசல்ஸ்சிலிருந்து வருகை தந்த குறித்த குழுவானது சிறிலங்காவின் பல இடங்களுக்கும் பயணம் மேற் கொண்டு நடத்திய ஆய்வின் இறுதி யில் நேற்று சிறிலங்காப் பிரதமரைச் சந்தித்துள்ளது. 

இச்சந்திப்பில், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்கள், சுற்றா டல் தரநியமங்கள் போன்றவற்றில் சிறிலங்கா அரசாங்கம் முன்னேற்றங்க ளை வெளிப்படுத்தியுள்ளது. மனித உரிமைகளில் ஏற்பட்டுள்ள உண்மையான மாற்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அரசாங்கத்தின் சிறந்த ஒத்துழைப்புள்ளது.  

இருப்பினும் முக்கியமான விடயங்களில் சிறிலங்கா இன்னும் முன்னேற வேண்டியுள்ளமை முக்கிய விடயமாகவுள்ளது. சித்திரவதைகள் நிறுத்தப்பட வேண்டியது முக்கியம். 

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாற்றியமைத்தல் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். போரின் முடிவில் காணாமல் போன வர்களின் கதி என்னவென்று தெளிவுபடுத்தப்பட வேண்டுமென இச்சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியக் குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.